22.12.13

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1)
முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter
கொடுக்கவும்.

3)
இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4)
உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*
என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும். 

நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் 

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்

சிலைகளுடன் சண்டைபோடும் மனிதர்கள் .. ஒரு வேடிக்கையான கலைமுயற்சி !!


சிலைகளின் வடிவத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டவர்களே இவர்கள், இவர்களும் சிலையும் சேரும்போது சில நகைச்சுவையான தோற்றங்களை வெளிப்படுத்துகின்றன.

பொது இடங்களில் தம்மை படம்பிடித்துக் கொள்பவர்களும் இதுபோன்ற சிலைகளுடன் எடுத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.








158 வருடங்களுக்கு பின் எகிப்தில் அதிசய பனி மழை!

பனி பொழிவது எகிப்தில் மிக மிக அபூர்வமான விடயம். ஆனால் கெய்ரோ நகரம் தற்போது பனி மயமாக காட்சி கொடுக்கின்றது.
அதாவது 158 வருடங்களுக்கு பின்னர் இங்கு பனி பொழிந்து உள்ளது. இதற்கு முன்னர் 1855 ஆம் ஆண்டு இங்கு பனி பொழிந்து உள்ளது.























உடல் பருமன் கூடினால் கல்லீரல் புற்றுநோய் வரலாம்

சர்வதேச ஜீரண ஆரோக்கிய தினம் ஆண்டுதோறும் மே 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச ஜீரண ஆரோக்கிய தினத்தின் நோக்கம் கல்லீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தடுத்தல், கண்டறிதல் ஆகும். புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றாவது பெரிய பாதிப்பாக கல்லீரல் புற்றுநோய் உள்ளது.
உலகம் முழுவதும் இதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற புற்றுநோய்கள் போல் இல்லாமல் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் இறப்பு சதவீதம் 1:1 என்ற அளவில் உள்ளது.
உடல் பருமன், சர்க்கரை மற்றும் ஹெபடைடீஸ் பி மற்றும் ஹெபடைடீஸ் சி ஆகியவை காரணமாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. கொழுப்பினால் கல்லீரல் வீக்கம் அதிகரிப்பதாலும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது.

hghhh

உலக மக்கள் தொகையில் 12இல் ஒருவர் ஹெபடைடீஸ் பி மற்றும் ஹெபடைடீஸ் சி நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக முழுவதும் 50 கோடி மக்கள் ஹெபடைடீஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
உலக கேஸ்ட்ரோஎன்டராலஜி அமைப்பின் இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி கூறுகையில், உலகம் முழுவதும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மது குடிப்பதால் மட்டும், கல்லீரல் புற்றுநோய் வரும் என்று சொல்ல முடியாது. உடல் பருமனாலும் கல்லீரல் புற்றுநோய் வரக்கூடும். ஹெபடைடஸ் பி தடுப்பூசி போட்டு கொண்டால், கல்லீரல் புற்றுநோயை தடுக்க லாம் என்றார்.