5.1.14

மாதுளம் பழத்தின் மருத்துவ மகிமை...


மாதுளம் பழத்தின் மருத்துவ மகிமை... ரத்தத்தை உற்பத்தி செய்யும் மாதுளை. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது. இதய நோய்கள், இதய பலகீனம் நிவர்த்தியாகும்.இரத்த விருத்தி ஏற்படும். சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம். மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்





jiya jale by Lata, a r rahman live concert

Tere Bina - Chinmaye A R Rehman in Live Concert

4.1.14

சுக்கு மருத்துவக் குணங்கள்


சுக்கு மருத்துவக் குணங்கள்:- 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். 4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். 6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். 7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். 8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். 9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும். 10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். 11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். 12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும். 13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். 14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். 15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும். 16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். 17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். 18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும். 19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும். 20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

தண்ணீர் தண்ணீர் 'தவிச்ச வாய்க்குத் தண்ணீர்’


தண்ணீர் தண்ணீர் 'தவிச்ச வாய்க்குத் தண்ணீர்’ என்ற நிலை மாறி, தண்ணீரைக் கூட பணம் கொடுத்துதான் வாங்கவேண்டி இருக்கிறது. அப்படியே வாங்கினாலும், குடிக்கும் தண்ணீர்சுகாதாரமாக இருக்கிறதா என்றால், அதுவும் சந்தேகம்தான். இன்று, சாமானியர்களும் மினரல் வாட்டர் எனப்படும் சுத்திகரித்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். பாட்டில்களில் கிடைக்கும் குடிதண்ணீர் சுகாதாரமானதுதானா? எத்தனை நாட்கள்வரை அதைப் பயன்படுத்தலாம்? மனதுக்குள் அலையடிக்கும் கேள்விகளை, தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வசந்த் செந்தில் முன் வைத்தோம். • பாட்டிலின் லேபிளில், ஐ.எஸ்.ஐ. முத்திரைக்குக் கீழ் ஏழு இலக்க எண்கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவை உண்மையா எனக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். • பொது இடங்களில் விற்கும் பாட்டில் தண்ணீரின் தூய்மையை அறிவது உண்மையில் கடினம்தான். பல பாட்டில்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதி, பேட்ஜ் எண் போன்ற விவரங்கள் எதுவுமே குறிப்பிடப்பட்டு இருக்காது. உரிய விவரங்கள் உள்ள பாட்டில் தண்ணீரைப் பார்த்து வாங்குங்கள். • பாட்டிலில் கிடைக்கும் நீரைவிட குளோரினால் சுத்தம் செய்யப்பட்டு வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமானது. இரண்டு நாட்கள் வரை கிருமிகள் வளராது. 3 நாட்களுக்கு மேல் மிக மெதுவாக 7 நாட்கள் வரை கிருமிகள் வளர ஆரம்பிக்கும். 7 நாட்களுக்கு மேல் வேகமாக வளர வாய்ப்புண்டு. எனவே, குழாயில் பிடித்ததும் வடிகட்டி 20 நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக ஆறியப் பிறகு பருகுவது நல்லது. • கொதிக்க வைத்த நீருடன் குளிர்ந்த நீரைக் கலப்பதும், நீரைக் கொதிக்கவைக்காமல் வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் குடிப்பதும் நீரில் உள்ள கிருமிகளை மிக வேகமாக வளரவைக்கும். உஷார்! • பாட்டிலில் அடைக்கப்பட்டக் குடிநீர் பாட்டிலின் மூடியைத் திறந்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஏனெனில், பாட்டிலில் தண்ணீர் அடைக்கப்பட்ட பிறகு, ஏற்படும் கிருமித் தொற்றை அழிக்கவல்ல கிருமி நாசினி (குளோரின் போன்றவை) இல்லாததால் பாட்டிலில் ஏற்படும் சிறு நுண்துளைகள்கூடக் கிருமித்தொற்றுக்கு வழிவகை செய்துவிடும். • வீடுகளில் சாதாரண ஃபில்டரின் மூலம் நீரை வடிகட்டினாலும், பாக்டீரியாவை வடிகட்டுமே தவிர வைரஸ் கிருமிகளை வடிகட்டாது. வைரஸ் கிருமிகளைக் கொல்ல, குடிநீரை 20 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். • தண்ணீரை வடிக்கட்டிக் கொதிக்க வைத்து அதே பாத்திரத்தில் வைத்திருந்தால் 24 மணி நேரம் வரை குடிக்க மிகப் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், வேறு பாத்திரத்துக்கு மாற்றும்போது கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. • கொதிக்க வைத்து ஆறிய பிறகு, குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்தாலும் 48 மணி நேரத்துக்கு மேல் அதைப் பயன்படுத்தக்கூடாது.

சகாயம் மேஜிக்.. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2 தேசிய விருது பெற்ற கோ- ஆப்டெக்ஸ்!

சகாயம் மேஜிக்.. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2 தேசிய விருது பெற்ற கோ- ஆப்டெக்ஸ்!
Photo: சகாயம் மேஜிக்.. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2 தேசிய விருது பெற்ற கோ- ஆப்டெக்ஸ்!


நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மூலம் , இந்திய வரலாற்றில் முதல் முறையாக தேசிய விருதை தமிழகத்தின் கோ - ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது. கைத்தறி உற்பத்தி மற்றும் கைத்தறித் துறையில் மகத்தான பங்களிப்பிற்காக முதல் முறையாக இரண்டு தேசிய விருதுகளை கோ - ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தான். 1256 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம் ஆகும். கோ ஆப்டெக்ஸ்க்கு நாடு முழுக்க 200 இடங்களில் ஷோரூம்கள் உள்ளது. கடந்த பல வருடமாக கோ - ஆப்டெக்ஸ் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில், கோ - ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக சகாயம் பொறுப்பேற்றார்.இன் பிறகு, கைத்தறி சேலை மற்றும் துணிகளை தயாரிப்பதில் புதுமைகளைப் புகுத்தினார். இதனால், கடந்த ஆண்டு மட்டும் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் லாபம் மட்டுமே ரூபாய் ரெண்டே கால் கோடி கிடைத்தது. அதில் ஒரு கோடியை கைத்தறி நெசவாளர்களுக்கே ஊக்கத் தொகையாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார் சகாயம். அடுத்த கட்டமாக, கைத்தறித் தயாரிப்புகளோடு விலைப் பட்டியலுடன் சேர்ந்து அந்தத் துணியை நெய்த நெசவாளியின் புகைப்படம், பெயர், அந்தத் துணியை நெய்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள், உடல் உழைப்பு பற்றிய விவரங்களையும் தனி அட்டையில் அச்சிட வைத்தார். முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நெசவாளிகள் 100 பேர் நெய்து கொடுத்த சேலைகள் அவர்களைப் பற்றிய விவர அட்டையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் 2013-ல், அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்காகவும் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். இந்த விருதுகளை, டெல்லியில் நடந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ். தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திடம் வழங்கினார்.

நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மூலம் , இந்திய வரலாற்றில் முதல் முறையாக தேசிய விருதை தமிழகத்தின் கோ - ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது. கைத்தறி உற்பத்தி மற்றும் கைத்தறித் துறையில் மகத்தான பங்களிப்பிற்காக முதல் முறையாக இரண்டு தேசிய விருதுகளை கோ - ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தான். 1256 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம் ஆகும். கோ ஆப்டெக்ஸ்க்கு நாடு முழுக்க 200 இடங்களில் ஷோரூம்கள் உள்ளது. கடந்த பல வருடமாக கோ - ஆப்டெக்ஸ் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில், கோ - ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக சகாயம் பொறுப்பேற்றார்.இன் பிறகு, கைத்தறி சேலை மற்றும் துணிகளை தயாரிப்பதில் புதுமைகளைப் புகுத்தினார். இதனால், கடந்த ஆண்டு மட்டும் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் லாபம் மட்டுமே ரூபாய் ரெண்டே கால் கோடி கிடைத்தது. அதில் ஒரு கோடியை கைத்தறி நெசவாளர்களுக்கே ஊக்கத் தொகையாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார் சகாயம். அடுத்த கட்டமாக, கைத்தறித் தயாரிப்புகளோடு விலைப் பட்டியலுடன் சேர்ந்து அந்தத் துணியை நெய்த நெசவாளியின் புகைப்படம், பெயர், அந்தத் துணியை நெய்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள், உடல் உழைப்பு பற்றிய விவரங்களையும் தனி அட்டையில் அச்சிட வைத்தார். முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நெசவாளிகள் 100 பேர் நெய்து கொடுத்த சேலைகள் அவர்களைப் பற்றிய விவர அட்டையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் 2013-ல், அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்காகவும் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். இந்த விருதுகளை, டெல்லியில் நடந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ். தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திடம் வழங்கினார்.

1.1.14

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.



உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. ius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த செய்தியே தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்.

Jilla Official Teaser HD | Ilayathalapathy Vijay, Mohanlal