18.11.13

Making of Malini 22 Palayamkottai

Acharam Movie Shooting Spot

Meiyazhagi Audio Launch Event

GTA 5 Official Launch Trailer

Batman: Arkham Origins -- Launch Trailer

itharku Thaane Aasai Pattai Balakumara Full Movie HD


Pandiya Naadu Fy Fy Fy Kalaachify Video Song HD

Othakadai Othakadai Machan Full Video Song - Pandiya Naadu

Irandaam Ulagam Press Meet Press Questions

Ennachu 2013 Tamil Movie Songs Free Download

Ennachu 2013 Tamil Movie MP3 Songs Free Download

*****Songs are for promotional purpose only. Please buy original CD*****
Ennachu 2013 Tamil Movie Info:
Director :: Sri Mani
Producer :: Smile Production
Cast :: New Faces
Music Director :: Sai Kartheek
Music Label :: Feliz E-Media
Track :: 3tracks

1.Saral Mazha - Haricharan  Download

2.Macha Macha - Mughesh Download

3.Pattam Poochi - Darshana  Download

Azhagu Magan 2013 Tamil Movie MP3 Songs Free Download

Azhagu Magan 2013 Tamil Movie MP3 Songs Free Download

 *****Songs are for promotional purpose only. Please buy original CD*****

Azhagu Magan 2013 Tamil Movie  Info:
Azhagu Magan – 2013
Music : James Vasanthan
Cast: Udhay, Malavika Wales, Ilavarasu, Pavan
Year  2013


1.Koothadikudhu Koothadikudhu - Shankar Mahadevan, Chorus Download

2.Manasula Manasula - Hariharan, Pooja Download

3.YennaSolla - Nivas Download

4.Yenna Yenna - Sai Sudha, Jay  Download

Sankarapuram 2013 Tamil MP3 Songs Download Free

குழந்தைகள் சீக்கிரம் பேச


குழந்தைகள்  சீக்கிரம் பேச வேண்டுமா? 


குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறதோ, அதைத் தான் சொல்வார்கள்.

மேலும் சில குழந்தைகள் 2 வயதாகியும் பேசமாட்டார்கள். அப்போது உடனே குழந்தைகளை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அடுமட்டுமின்றி அத்தகைய குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான முறைகளையும் தெரிந்து கொண்டு, அதனை குழந்தைகளில் நடைமுறைப்படுத்தி, விரைவில் பேச வைக்க வேண்டும். இப்போது அந்த மாதிரியான குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போமா!!!

5 ways boost late talking toddlers

* குழந்தை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகியும் பேசவில்லையெனில் அதற்கு காரணம் அவர்களுக்கு சரியாக எழுத்துக்கள் புரியவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு எதுவும் சரியாக பேசத் தெரியாது. அதனால் சில குழந்தைகள் பேசுவதற்கு பயந்து பேசாமல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் சொல்வதை அப்படியே நினைவில் வைத்து பேசும் திறன் கொண்டவர்கள். எனவே அவர்களின் பேச்சுத்திறனை அதிகரிக்க, அவர்களிடம் பெற்றோர் நன்கு பேச வேண்டும். அவ்வாறு அவர்கள் பேசும் போது, அவர்களை உற்சாகப்படும் படியாகவும், அவர்களை அதிகமாக பேச வைப்பது போலும் பேச வேண்டும்.

* ஏதாவது ஒரு புதிய சொல்லை சொல்லித் தரும் போது, அவர்களுக்கு அதை போட்டோவில் காண்பிக்காமல், முடிந்த வரையில் அந்த பொருட்களை அவர்களுக்கு நேரில் காண்பிப்பது நல்லது. அதே நேரம் அந்த பொருள் எதற்கு உதவுகிறது என்றும் அவர்களுக்கு புரியும் வகையிலும் சொல்ல வேண்டும். முக்கியமாக எந்த ஒரு பொருளை பார்க்கும் போதும், அதை அவர்களிடம் திரும்ப திரும்ப சொன்னாலும், அவர்கள் மனதில் பதிந்துவிடும். அவர்களும் எந்த பயமுமின்றி பேசுவார்கள்.

* குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, அதை அவர்களுக்கு அடிக்கடி காலை அல்லது மாலை நேரங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அவர்கள் மனதில் எந்த ஒரு விஷயமும் எளிதில் பதிந்துவிடும். அதுமட்டுமின்றி, அந்த சொற்களை திரும்ப திரும்ப சொல்லும் போது, அவர்கள் அதை எப்போதும் மறக்காமல் இருப்பார்கள்.

* குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பதன் மூலமும் அவர்களை விரைவில் பேச வைக்கலாம். அதையும் ராகத்துடனும், அசைவுடனும் சொல்லிக் கொடுத்தால், அவர்களுக்கு ஆர்வம் அதிகரிப்பதோடு, மனதில் உற்சாகம் அதிகரித்து, அவர்களை எளிதில் பேச வைக்கலாம்.

* சில குழந்தைகள் விரைவில் பேசாமல் இருப்பதற்கு, அவர்களது வெட்கமும் காரணம் என்று சொல்லலாம். ஆகவே அவர்களின் வெட்கத்தை போக்குவதற்கு அவர்களை வெளியே அழைத்துச் சென்று, மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பதன் மூலமும், அவர்கள் வெட்கத்தை விட்டு, மற்றவர்கள் எப்படி பேசுகின்றனர் என்பதைப் புரிந்து பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

மழலை மொழி என்பது ஒரு இனிமையான ஒரு மொழி. அந்த இனிமையான மொழியை உங்கள் குழந்தைகளிடம் விரைவில் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அவர்களை விரைவில் பேச வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, பேச வைக்க வேண்டும். ஆகவே மேற்கூறிய ஒரு சிலவற்றை பின்பற்றுவதன் மூலம் அவர்களை விரைவில் பேச வைக்கலாம். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

நடிகையின் உதட்டை கடித்த நகைச்சுவை கஞ்சாகருப்பு..!


kanja

கே.கே. பிலிம் இண்டர் நேஷனல் பட நிறுவனம் சார்பில் கஞ்சாகருப்பு தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் வேல்முருகன் போர்வெல்ஸ்.
இன்னொரு நாயகனாக அங்காடி தெரு மகேஷ் நடிக்கிறார். ஐ.டி.அரசன் மதுரை டாக்டர் சரவணன் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். வடிவேலுவுடன் நடித்த அனைத்து காமெடி நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி எம்.பி.கோபி இயக்குகிறார். இவர் மலையன் படத்தை இயக்கியவர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
கிராமம் கிராமமாக போய் போர்வெல் போட்டு பிழைப்பு நடத்துபவர்களை பற்றிய கதை. போர்வெல் உரிமையாளராக வருகிறார் கஞ்சா கருப்பு. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு போரூர் கார்டனில் நடந்தது. கஞ்சா கருப்பு-ரகசியா புது திருமண தம்பதி. கஞ்சா கருப்பு போர் போடும் தொழில் செய்பவர் என்பதால் தனது மனைவியை பிரிந்து நண்பர்களுடன் வெளியூருக்கு போர் போட சென்றுவிடுகிறார். இப்படி பல நாட்கள் கழித்து வீடு திரும்பும் அவரை, ரகசியா அரவணைத்து வரவேற்பது போன்று காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
இந்த காட்சியில் கஞ்சா கருப்பு நடித்த போது திடீரென ரகசியாவின் உதட்டை கடித்து விட்டாராம். இதனால் கோபமடைந்த ரகசியா, கஞ்சா கருப்பை திட்டியதோடு படப்பிடிப்பிற்கு வர மறுத்துவிட்டாராம். அதன் பிறகு இயக்குனர் கோபியும் படப்பிடிப்பு குழுவினரும் சமாதானம் செய்து ரகசியாவை நடிக்க வைத்தனர்.

எம்.பியானதால் நடிக்க மறுப்பு : நடிகை ரம்யா மீது பட அதிபர் புகார்!!



நடிகை ரம்யா எம்.பியானதால் கன்னடத்தில் நடித்து வந்த நீர்டோஸ் படத்தில் இருந்து பாதியில் வெளியேறி விட்டார். இதனால் அப்படம் முடிவடையாமல் முடங்கி போய் உள்ளது. இயக்குனரும், தயாரிப்பாளரும் தவிக்கிறார்கள்.
ரம்யா தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். சமீபத்தில் கர்நாடகத்தில் உள்ள மாண்டியா தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார்.
எம்.பியாவதற்கு முன்பு நீர்டோஸ் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார். இதில் ரம்யாவுக்கு விலைமாது வேடமாம். படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளது. எம்.பியானதால் தொடர்ந்து அப்படத்தில் நடிக்க மறுத்து வருகிறார்.
விலைமாது வேடம் என்பதால் தனது இமேஜ் கெடும் என அஞ்சுகிறார். எனவே படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முடக்கி போடுவதற்காகவே நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. நீர்டோஸ் படத்தின் தயாரிப்பாளர் சுதீந்திரா கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் ரம்யா மீது புகார் அளித்துள்ளார்.
ரம்யா 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து படத்தை முடித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து விசாரிப்பதற்காக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் அவசர கூட்டம் நாளை கூடுகிறது. இதில் ரம்யா சார்பில் அவரது மானேஜர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரம்யா கட்சி பணிகள் மற்றும் அரசியல் கூட்டங்களில் பிசியாக பங்கேற்பதால் வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இதில் ரம்யா மீது நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். ரம்யா ஒப்பந்தப்படி ஏற்கனவே ஒதுக்கிய நாட்களில் நடித்து முடித்து விட்டார். மீண்டும் அப்படத்தில் நடிக்க மாட்டார் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.

மகளுக்கு ஆராதனா என பெயர் சூட்டினார் சிவகார்த்திகேயன்!!


siva

சிவகார்த்திகேயன் இந்த வருடம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து ஹட்ரிக் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். 5 படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக ஆகிவிட்டார்.
இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை ஒன்று பிறந்தது அவரை மேலும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இப்போது தன்னுடைய குழந்தைக்கு ஆராதனா என பெயர் சூட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது ஹன்சிகா மொத்வானியுடன் இணைந்து மான் கராத்தே படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்திலும் நடிக்கப்போகிறாராம். 2014ம் ஆண்டு இறுதி வரை தன் கைவசம் படங்கள் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் விரைவில் தயாரிப்பாளராக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கனவே ஜனவரி ரேஸில் ரஜினி, அஜீத்: இதில் லேட்டஸ்டாக சேர்ந்த கமல்

ஜனவரி 26ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான், அஜீத் குமாரின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. கோச்சடையான் ரிலீஸாவதால் பொங்கலுக்கு பிற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்கையில் கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். கமல் படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தை போன்று இந்த படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பினால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் முக்கிய நடிகர்களின் படங்களாக ரிலீஸாவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
கோச்சடையான் மட்டும் 700 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யார் படத்திற்கும் பாதிப்பில்லாமல் படங்களை வெளியிட ஆலோசனை நடந்து வருகிறதாம்.

நடிகை சினேகா கர்ப்பம்: சந்தோஷத்தில் கணவர் பிரசன்னா

நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் பிரசன்னா சினிமாவில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்ததால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார் சினேகா. அதுமட்டுமில்லாமல் விளம்பரம், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்து வந்தார்.
இந்நிலையில், சினேகா கர்ப்பமாகியிருக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. அவர் கர்ப்பமாகியிருப்பதால் குழந்தை பிறந்து 2 வயது ஆகும் வரை இனி எந்த படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சினேகா நடித்துக் கொண்டிருக்கும் ஒருசில படங்களின் படப்பிடிப்புகளை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டில் தங்கி ஓய்வெடுக்கப் போகிறாராம்.
சினேகா கர்ப்பமாகியிருக்கும் செய்தி கேட்டு அவரது கணவர் பிரசன்னா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். மனைவி சினேகாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக வைத்துள்ளாராம் பிரசன்னா.
எது, எப்படியோ இன்னும் இரண்டு வருடங்கள் சினேகாவை திரையில் பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம்தான்.

பொங்கலுக்கு ‘கோச்சடையான்’, ‘வீரம்’ கன்ஃபர்ம்: அப்போ ‘ஜில்லா’?

பொங்கலுக்கு கோச்சடையான் மற்றும் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யின் ஜில்லா நிச்சயமாக பொங்கலுக்கு ரிலீஸாகுமா என்பது தெரியவில்லை.
பல ஆண்டுகள் கழித்து விஜய் மற்றும் அஜீத் படங்கள் வரும் பொங்கலுக்கு மோதவிருந்தன. இந்நிலையில் எப்பொழுது ரிலீஸாகும் என்று தெரியாமல் இருந்த ரஜினியின் கோச்சடையான் பொங்கலுக்கு வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
பொங்கல் போட்டியில் ரஜினியின் படம் திடீர் என்று வந்துள்ளது பிற படங்களின் ரிலீஸ் தேதியை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

அஜீத்தை திருமணம் செய்ய விரும்பும் நடிகை!

Actress Preeti Das Photoshoot Stillsபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி தாஸ். தற்போது மறுமுகம், உயிருக்கு உயிராக படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து பேசிய ப்ரீத்தி, அஜீத்தை திருமணம் செய்வேன் என்ற அதிர்ச்சி ஆசையை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது: மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது ஆடிசன் மூலமாக செலக்ட் ஆகி இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க இருக்கிறேன்.
நான் மேற்கத்திய கலாச்சாரத்துடன் வளர்ந்த பொண்ணு அதனால் கவர்ச்சி காட்டுவதிலோ, லிப் லாக் முத்தம் கொடுப்பதிலோ தயக்கம் இல்லை. உயிருக்கு உயிராக படத்தில் லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறேன். விதவிதமான கேரக்டர்களில் வித்தியாசமாக நடிக்க ஆசை.
அஜீத் சாருடன் நடிக்க ஆசையாக இருக்கிறேன். அவரை கல்யாணம் பண்ணிக்கொள்ளும் ஆசைகூட இருக்கிறது. ஆனால் அவருக்குத்தான் கல்யாணமாகி விட்டதே. தமிழ்ல எல்லா ஹீரோக்களோடும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அழகா இருக்கேன். நன்றாக நடிப்பேன், தமிழ், இந்தி, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என 5 மொழிகள் பேசத் தெரியும் என்றார் ப்ரீத்தி தாஸ்.

Deeksha Panth Latest Stills









Rhythamika Latest Hot Gallery
















Actress Samantha New Photoshoot Gallery





Actress Geeth Shah Latest Stills









Jasmin Bhasin in Orange Dress Stills