தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் இயக்குநர் கே.பாலசந்தருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது                    வழங்கி கெளரவிக்க இருக்கிறார்கள்.

கே.பாலசந்தருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி கெளரவிக்க இருக்கிறது ரைன் டிராப்ஸ் அமைப்பு.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பல ஆண்டுகளாக சினிமா உலகில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றிவரும் இயக்குநர் கே பாலசந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது வழங்கும் விழாவில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பழம்பெரும் நடிகை மனோரமா ஆகியோருடன் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான ஆர்.அஸ்வின், ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் 'மாற்றம் ஆவோம்', ( 2014) என்ற ஆண்டிற்கான காலண்டர் உலக எய்ட்ஸ் தினத்தில் வெளியிடப்படுகிறது. இந்த காலண்டரில் சாதனையாளர்களை பற்றிய தகவல்களும் சிறந்த சமூக கருத்துகளும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி நிதி குறித்த விவரங்களும் அடங்கியிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது
.