24.11.13

Actress Hari Priya Stills













Samantha unseen Cute Stills















ஜில்லாவுக்கு இப்போதிலிருந்து தியேட்டர் புக் பண்ணுங்க! – விஜய் தீவிரம்



பொங்கலுக்கு வருவதில் உறுதியாக நிற்கும் விஜய், தன் ஜில்லா படத்துக்கு வேகமாக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
படத்தின் தயாரிப்பாளரிடம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அரங்குகளை ஒப்பந்தம் செய்யுமாறு விஜய் கூறியுள்ளாராம்.
ஜில்லா
இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் உள்ள அரங்குகளை தீவிரமாக வளைத்துப் போட்டு வருகிறார்களாம்.
பொங்கலுக்கு வரும் மற்ற பெரிய படங்களான கோச்சடையான் மற்றும் வீரம் படங்களுக்கு தியேட்டர் தருவதாக வாக்களித்துள்ள நிலையில், ஜில்லாவுக்கும் அப்படி அதிக அரங்குகளை ஒதுக்குவது என மல்டிப்ளெக்ஸ் மற்றும் இரு தியேட்டர் வளாகங்கள் திகைத்து நிற்கின்றனவாம்.
‘ஆனால் இதுபற்றியெல்லாம் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். படத்தை முழுமையாக விற்றாகிவிட்டது. பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்பதை வாங்கியிருப்பவர்களுக்கு அழுத்தமாக சொல்லிவிடுங்கள்’, என்று விஜய்யே ஆர்பி சவுத்திரியிடம் கூறியுள்ளாராம்.
நெல்லை, கன்யாகுமரி மற்றும் தூத்துக்குடி பகுதியில்தான் முதல் புக்கிங்கை ஆரம்பித்துள்ளது ஜில்லா டீம்.
அவர்களிடம், இந்த முறை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நம்ம படம் வெளியாகும். தியேட்டர்களைக் கொடுங்க என்று உறுதியளித்தாராம் ஆர்பி சவுத்ரி.

மீண்டும் ஸ்ரீதேவியுடன் கவுரவ வேடத்தில் நடிக்கும் அஜீத்

    மீண்டும் ஸ்ரீதேவியுடன் கவுரவ வேடத்தில் நடிக்கும் அஜீத்

பிரியாணி படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு ரிலீஸுக்கு காத்திருக்கிறார் வெங்கட்பிரபு. அடுத்ததாக அவர் சொந்தமாக தயாரித்து இயக்க ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்துள்ளராம்.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் அவருடைய வழக்கமான பிரேம்ஜி கோஷ்டிகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஆனாலும் அவரது நண்பர்கள் புதுமுகங்கள் வைத்து எடுக்கும் படத்தில் யாராவது ஒரு பிரபல நடிகரை கெளரவ வேடத்தில் நடிக்க வைத்தால் எளிதில் படம் வியாபாரம் ஆகும் என அறிவுரை கூறியதால், தனது மங்காத்தா நட்பை மீண்டும் புதுப்பிக்க வெங்கட்பிரபு முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் கதையை தல அஜீத்திடம் கூறிய வெங்கட்பிரபு, அதில் வரும் கவுரவ வேடத்தில் ஒரு வாரம் மட்டும் கால்ஷீட் கொடுத்து நடித்து தரும்படி கேட்டுக்கொண்டார். பில்லாவுக்கு பிறகு நீண்டநாள் வெற்றியை ருசிக்காமல் இருந்த அஜீத்துக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் வெங்கட்பிரபு என்ற காரணத்தால், உடனே சரியென்று ஒப்புக்கொண்டார். ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு தல அஜீத் கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் இது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஸ்ரீதேவிக்கும் ஒரு சின்ன கேரக்டர் இருக்கிறதாம்.

நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது



ஆடுகளம், வனயுத்தம், பாண்டிய நாடு ஆகியப் படங்களில் நடித்துள்ளவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச ஜெயபாலன். இலங்கையைச் சேர்ந்தவரான இவர் அங்கு நடைபெற்ற உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார்.
கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலனின் தாயார் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார்.
மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு உறவினர் ஒருவரது வீட்டுக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.
நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை போலீசார் சுற்றி வளைத்தனர். விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.
கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை போலீசாரின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே கவிஞர் ஜெயபாலன் கைது விஷயத்தில் சிங்கள உயர் அதிகாரிகள் மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் அடாவடித்தனமாக நடந்து கொள்வது தெரிய வந்துள்ளது. நேற்றிரவு கவிஞர் ஜெயபாலனை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர் – சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
வவுனியாவில் இருந்து ஜெயபாலனை கொழும்பு கொண்டு செல்ல சிங்களர்கள் முயன்று வருகிறார்கள். அவரை ரகசிய இடத்தில் காவலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவரை சிங்களர்கள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி சித்ரவதை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினியின் கோச்சடையான் ஓர் முன்னோட்டம்…!



சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதற்கு முன்னால் அந்த பொங்கல் விருந்தில் என்ன இருக்கிறது என்பதை கொஞ்சம் டேஸ்ட் பார்க்கலாம்…
* கோச்சடையான் தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரமிக்க படைத் தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.
* முதல் பகுதியில் கோச்சடையானின் ஆதிக்கம் இருக்கும். ஆர்வ கோளாறினால் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று கோச்சடையான் மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை கோச்சடையான் கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.
* கோச்சடையான் ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே. ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர்.
* ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.
* படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
* ஏ.ஆர்.ரகுமான் இசையில் 6 பாடல்கள் இடம்பெறுகிறது. அதில் ஒன்று “எதிரிகள் இல்லை…” என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்த பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், தெலுங்கில் பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில் பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
* தமிழ் தெலுங்கு இரண்டிற்குமே ரஜினி டப்பிங் பேசியிருக்கிறார்.
* படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இண்டர்வெல் கிடையாது.
* படத்தை 3டியிலும் வெளியிட இருக்கிறார்கள். இதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம் பொங்கலுக்கு வருகிறது.
கோச்சடையான் லேட்டா வந்தாலும் கண்டிப்பாக லேட்டஸ்ட்டா வருவான்.

நூறாண்டு சினிமா ட்ரெண்டை உடைத்தெரிந்த விஜயசேதுபதி!

ஹீரோ என்றால் முப்பது நாற்பது பேரையாவது பந்தாட வேண்டும். கதாநாயகிகளை கட்டிப்பிடித்து புரள வேண்டும். நல்லவனாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நூறு ஆண்டு சினிமாவின் ட்ரெண்டை உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி.
நான் ஹீரோவல்ல கதைதான் ஹீரோ என்ற கணக்கில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் ஓ.கே செய்யும் கதைகள் வழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
நீண்டகாலமாக ஹீரோயிசம் கொண்ட படங்களை பார்த்துப்பார்த்து போரடித்துப்போன ரசிகர்களுக்கு இது புதுமையாக இருப்பதால், தொடர்ந்து அவர் நடிக்கிற படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனால் மிகக்குறைவான பட்ஜெட் கதைகளில் நடித்து பெரிய அளவில் தயாரிப்பாளர்களுககு லாபம் சம்பாதித்துக் கொடுத்து வருகிறார் விஜயசேதுபதி.
இதனால், ஏற்கனவே வளர்ந்து விட்ட ஹீரோக்கள் நாங்கள் எப்போதுமே ஹீரோயிச கதைகளில் இருந்து மாற மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தபோதிலும், வளர்ந்து வரும் பல ஹீரோக்கள் விஜயசேதுபதி காட்டிய புதிய ட்ரெண்டுக்கு மாற தயாராகி வருகிறார்கள்.
கூடவே புதிதாக வரும் இயக்குனர்களும், ஹீரோக்களை மனதில் கொள்ளாமல் கதை பண்ணி வருவதால், அடுத்து விஜயசேதுபதி உருவாக்கிய ட்ரெண்டுதான் நிலைக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஒருவேளை அப்படி ஒரு ட்ரெண்டு உருவாகி விட்டால், நம்முடைய ஹீரோ ட்ரெண்ட் என்னாவது என்று மேல்தட்டு ஹீரோக்கள் மத்தியில் சிறிய அளவிலான அதிர்வலைகள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

கிடுகிடுவென வளரும் ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா!



சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக நடித்தவர் ஆந்திர அழகி ஸ்ரீதிவ்யா. அதற்கு முன்பே காட்டுமல்லி, நகர்ப்புறம் என்ற இரண்டு படங்களில் இவர் நடித்துள்ளார். அப்படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இந்த நிலையில் மூன்றாவதாக கமிட்டான படம் ஸ்ரீதிவ்யாவை பிரபலப்படுத்தி விட்டது.
அப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவைப்பார்த்து பாடும் ஊதா கலரு ரிப்பன்தான் இப்போது காலேஜ் பையன்களில் பேவரைட் ரிங்டோனாக உள்ளது. அதனால், ஒரே படத்தில் யூத்தின் கனவுகன்னியாகி விட்டார் திவ்யா.
மேலும், லட்சுமிமேனன், நஸ்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் கவர்ச்சி என்ற வார்த்தையே உச்சரித்தாலே முகம் சுழிப்பதால், சைவம், அசைவம் என இரண்டுவிதமான நடிப்புக்கும் ஸ்ரீதிவ்யா தயாராக இருப்பதால், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பென்சில், அதர்வா நடிக்கும் ஈட்டி, விஷ்ணு நடிக்கும் வீரதீரசூரன் என பல படங்களில் இப்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதனால் இதுவரை கோடம்பாக்கத்தில் நிலவிய நடிகை பஞ்சம் காரணமாக நஸ்ரியா, லட்சுமிமேனன் போன்ற நடிகைகளிடம் கால்சீட் கேட்டு துரத்தி வந்த பல இயக்குனகள் இப்போது ஸ்ரீதிவ்யா பக்கம் திரும்பி விட்டனர்.
இதனால் கூடிய சீக்கிரமே டஜன் படங்களுக்கு மேலும் கமிட்டாகி கோடம்பாக்கத்தை மொத்த குத்தகை எடுத்து விடும் வகையில் கிடுகிடுவென வேகமாக வளரத் தொடங்கியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.

எனக்கு ஜாக்பாட் அடித்து விட்டது: நானி உற்சாகம்



விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ், துளசி நடிக்கும் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் தெலுங்கு ரைட்சை நான் ஈ ஹீரோ நானி வாங்கியிருக்கிறார். தெலுங்கில் அவரே தயாரித்து விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நானி பேசியதாவது: நான் விஜய்சேதுபதியின் பரம ரசிகன். அவரது நெருங்கிய நண்பன். அவர் நடிக்கும் எல்லா படத்தையும் பார்த்துவிடுவேன். சமீபத்தில் அவரை சந்தித்தபோது பண்ணையாரும் பத்மினியும் கதையை சொல்லி சில போட்டாக்களை காட்டினார்.
அதை பர்த்தும் அதை தெலுங்கில் நான் நடிக்க வேண்டும் என்று படத்தின் ரைட்சை வாங்கினேன். இப்போது பின்னணி இசை சேர்க்கப்படாத நிலையில் படத்தை பார்த்தபோது எனக்கு லாட்டரி அடித்த மாதிரி இருந்தது. எனது நண்பர்களுக்கு போன் பண்ணி சொன்னேன்.
இப்போது பெரிய திரையில் பாடலையும், டிரைய்லரையும் பார்த்தபோது ஜாக்பாட் அடித்த மாதிரி இருந்தது. அதே நேரத்தில் இந்த அளவுக்கு நம்மால் செய்ய முடியுமா என்கிற பயமும் வந்திருக்கிறது.
இவ்வாறு நானி கூறினார்.

அஜீத் படத்தில் நடிக்கிறார் ஷாரூக்கான்!


பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள படம் ஆரம்பம். கடந்த மாதம் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டிக் கொண்டு இருக்கிறது.
அதனால் அடுத்தபடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் வீரம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கோலிவுட்டில் சாதனை புரிந்த ஆரம்பம் பாலிவுட்டிலும் சாதிக்கும் என்ற நம்பிக்கையில், அப்படத்தை அதே விஷ்ணுவர்தன் இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆரம்பம் படத்தை சமீபத்தில் பார்த்து ரசித்த ஷாரூக்கான் படம் பிரமாதமாக உள்ளது. இந்தியில் நாம் ரீமேக் பண்ணலாம் என்று விஷ்ணுவர்தனிடம் கூறியிருக்கிறாராம்.
அதோடு, தமிழில் அஜீத் நடித்த வேடத்தில் ஷாரூக்கானும், தெலுங்கு நடிகர் டாணா நடித்த வேடத்தில் அஜீத்தும் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்தியில் ஷாரூக்கான் நடித்த சாம்ராட் அசோகா படத்தில் ஒரு கேரக்டரில் அஜீத்தும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தி படத்தில் அஜீத் நடிப்பது பற்றிய தகவல் இதுவரை அவர்தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.