25.11.13

Tapsee Beautiful Photos At Azva Jewellery Launch





Trisha Latest Beautiful Photoshoot





tapsee in saree latest stills






தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு புற்றுநோய் வராது

ht1483



குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோய் வராது என்று சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை தெரிவித்தார். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த கருத்தரங்கம் எழும்பூர் அரசு மகப்பேறு தாய்சேய் நல மருத்துவமனையில் நேற்று நடந்தது. ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், “தாய்ப்பால் கொடுப்பதினால், குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு அதிகரிக்கும். மார்பக, கர்ப்பப்பை மற்றும் வாய் புற்றுநோய் வராது. 3 வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பதில் சட்டீஸ்கர் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதில், தமிழகம் 33.3 சதவீதம் பெற்று 20வது இடத்தில்தான் இருக்கிறது’’ என்றார். மருத்துவமனை டீன் தகவல்

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்

ht2268
சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறு நீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது? குடும்ப பாரம்பரியம் இதற்கு முக்கிய காரணம். ஆக்சலேட் நிறைந்த காய்கறி உணவுகள், தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்கள், மாமிசம், அதிக புரதச் சத்துள்ள உணவுகள் ஆகியவை சிறுநீர் கற்கள் உருவாக முக்கிய காரணம் ஆகும். இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். 1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச் சீரான உணவை உட்கொள்ள வேண்டும். 3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். 4. பிரத்யேக உறுப்புகளின் சுத்தமும் பராமரிப்பும் முக்கியம்! சிறுநீரகக் கற்கள் யாருக்கு உண்டாகிறது? 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஆண்கள், வேலை காரணமாக வெயிலில் செல்கின்றனர். கடும் வேலை பளு காரணமாக தண்ணீர் குடிக்காமல் சிறுநீர் கற்கள் ஏற்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் ஆக்சலேட்டை உடலில் அதிகமாக உற்பத்திச் செய்கின்றன. சிறுநீரகக் கல் உருவானது அறிகுறி: அடி வயிற்றில் வலி இருக்கும். குமட்டல், வாந்தி, படபடப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும். ஙீக்ஷீணீஹ். மிக்ஷிறி மற்றும் 24 மணி நேர யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும். சிறுநீரகக் கல் உருவானது எப்படித் தெரியும்? மலைப் பகுதியான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் போன்ற ஏரியாக்களில் தண்ணீரில் சால்ட்கள் அதிகமுள்ளன. அந்த ஏரியாவின் பள்ளியில் உள்ள சிறுவர்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவர்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மாம்பழம், சீதாப்பழம் போன்றவை அதிக ஆக்ச லேட் கொண்டவை. பால், தயிர் மற்றும் பால், பொருட்கள் போன்றவை மூலம் கால்சியம் உள்ளே செல்வதால் உடலில் உள்ள உறுப்புகளில் கால்சியம் ஊறித் ததும்பிய நிலையில் இருக்கும். தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான லைஃப் ஸ்டைல், அதிகமான வேலைகள், டென்ஷன் போன்றவை பி.பி. போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக்கல்லுக்கும் ஒரு காரணம். முறையான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு நல்ல உறக்கம். மன அழுத்தமில்லா நிலை போன்றவை கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். சிறுநீர் கற்கள் உற்பத்தியாவதை தடுப்பது மருந்துகளில் இல்லை. அது நம் கையில்தான் உள்ளது. கிட்னி ஸ்டோன் பிரச்னைகளால் வலி மட்டுமல்லாமல் இறப்புகளும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதனால் உணவில் கவனமாக இருங்கள். தவிர்க்க வேண்டிய உணவுகள்: தேநீர், பருப்புக் கீரை வாழைப்பூ, வாழைக்காய், கொள்ளு கேசரி பருப்பு மாம்பழம், சீதாப்பழம் அரைக்கீரை, முருங்கைகாய் தாமரைத்தண்டு, எள் பச்சைமிளகாய், நெல்லிகனி உட்கொள்ள வேண்டியவை: நிறைய தண்ணீர், பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசணி) கேழ்வரகு புழுங்கல் அரிசி பருப்பு, காய்ந்த பட்டாணி கோஸ், கேரட், வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய், அவரை, வெண்டைக்காய். - See more at: http://www.cinebeeps.com/archives/4498#sthash.gBQg46Dp.dpuf

எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல…

ht2271

சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண்டு பயப்படுகிறோமோ இல்லையோ, நெஞ்சு வலி என்றால் துடித்துப் போகிறோம். காரணம், நெஞ்சுவலியை மக்கள் எப்போதும், மாரடைப்பின் அறிகுறியாகப் பார்ப்பதுதான். ‘‘எல்லா நெஞ்சு வலிகளும் மாரடைப்பின் அடையாளமில்லை…’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார். ‘‘மாரடைப்பினால் வரும் நெஞ்சு வலியானது, முதலில் நெஞ்சின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கும். மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, வலி இடது கைக்குப் பரவுவது, நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலிப்பது, மூச்சுத் திணறல், அரிதாக சில நேரம் கழுத்திலும் வலி போன்றவை இருக்கும். ஆனால், மற்ற பிரச்னைகளின் காரணமாக வரக்கூடிய நெஞ்சு வலிக்கும், இதயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நெஞ்சு வலிக்கான முக்கிய காரணங்களில் கழுத்து மற்றும் முதுகெலும்பு பாதிப்பு, தோள்பட்டை வலி, முதுகின் மேல்புற தண்டுவட சவ்வு பாதிப்பு மற்றும் நெஞ்செலும்பு சந்திப்புகளில் உண்டாகிற தேய்மானம் போன்றவை அடக்கம். தவிர அக்கி எனப்படுகிற இன்ஃபெக்ஷனும் ஒரு காரணமாகலாம். வயதானவர்களுக்கு ஏற்படும் முதுகெலும்பு உடைவதன் காரணமாகவும் இந்த வலி வரலாம். மேலே குறிப்பிட்ட அனைத்தும் நாள்பட இருக்கும். மயக்கம், படபடப்பு, மூச்சுத் திணறல் இருக்காது. எனவே வலி வந்ததும், இது ஆபத்தான இதய வலி இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கல்லீரல் பகுதியில் ஏற்படும் வலிகூட நெஞ்சு வலியாக உணரப்படலாம். எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் மருத்துவ ஆலோசனையின் மூலம் காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சையைத் தொடங்க வேண்டும். அக்கி வலியாக இருந்தால், ஒருவித ஊசியின் மூலம் சரிசெய்யலாம். தோள்பட்டை வலியானால், தோள்பட்டை தேய்மானம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க, தோள்பட்டை சந்திப்பில் ஊசியின் மூலம் மருந்தைச் செலுத்தி, சில பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படும். நெஞ்செலும்பு சந்திப்புகளில் வயதானவர்களுக்கு வரும் வலிக்கு மாத்திரைகளும், பயிற்சிகளுமே தீர்வு. முதுகெலும்பு நொறுங்குவதால் வரும் வலி வயதானவர்களுக்கு சகஜம். 11 மற்றும் 12-வது எலும்புகளே இத்தகைய நொறுங்குதலுக்குக் காரணம். இது அடி படுவதாலோ, விபத்தினாலோ ஏற்படாமல், கால்சியம் குறைபாடு காரணமாக வரும். மருந்து, மாத்திரைகள் பெரியளவில் உதவாது. வெர்ட்டிப்ரோபிளாஸ்டி எனப்படுகிற ஒரு ஊசி, எலும்பைப் பலப்படுத்தும் சிமென்ட் போல செயல்பட்டு, எலும்பை பலப்படுத்தி, வலியைக் குறைக்க உதவும். இதைப் போல ஒவ்வொரு காரணத்துக்கான பின்னணியைக் கண்டறிந்து, சரியான சிகிச்சை கொடுத்தாலே நெஞ்சு வலியிலிருந்து மீண்டு நிம்மதியாக வாழலாம்…’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.


ஆபாச காட்சியில் கத்தரி வைக்க சொன்ன நயன்தாரா!

தமிழில் ராஜாராணி, ஆரம்பம் என்று மறுபிரவேசம் செய்திருக்கும் நயன்தாரா, அனாமிகா படத்தில் ஆக்சன் கோதாவில் குதித்திருக்கிறார். இந்த நேரத்தில், ஆரம்பம் படத்தில் ஒரு காட்சியில் ஆபாசமாக நடித்திருந்தார் நயன்தாரா.
அதைப்பார்த்த சில அபிமானிகள், அந்த காட்சி உங்களை செக்ஸி நடிகையாக பிரதிபலிக்கிறது என்று அதிர்ச்சி செய்தி வாசித்தார்களாம். இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த நயன்தாரா, சம்பந்தப்பட்ட பட டைரக்டரிடம், அந்த காட்சியை கத்தரித்து தனது இமேஜை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டாராம்.
அவரது உணர்வுகளை புரிந்து கொண்ட ஆரம்பம் இயக்குனரும் பின்னர் அந்த ஆபாச காட்சியை கட் பண்ணி விட்டாராம்.
இதேபோல், சில தெலுங்கு படாதிபதிகள் பழைய ஞாபகத்தில் நயன்தாராவை கவர்ச்சி என்ற பேரில் ஆபாச குதிரையாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்களாம். அதோடு அனாமிகா படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கியிருக்கும் நயனின் சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்துவதாகவும் ஆசை காட்டினார்களாம்.
ஆனால், பில்லா பிகினி எல்லாம் பழைய கதையாகி விட்டது. இனிமேலும் நான் அப்படி நடித்தால் நான் கஷ்டப்பட்டு பாதுகாத்து வரும் சீதை இமேஜ் பாழாகி விடும் என்று நாசுக்காக சொல்லி நச்சரித்தவர்களை துரத்தியடித்து விட்டாராம்.
அதோடு, புதிதாக தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், ஆடை குறைப்பு, ஆபாசம் இல்லாத கதையாக இருந்தால் மட்டுமே சொல்லுங்கள். இல்லையேல் வந்தவழியே திரும்பிச்சென்று விடுங்கள் என்றும் நெத்தியடியாக சொலகிறாராம் நயன்தாரா.

தாறுமாறாக யாரோ கொளுத்திப்போட்டு விட்டனர்! -புலம்புகிறார் நஸ்ரியா

நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா, யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக புதிய படங்களை கைப்பற்றி நம்பர்-ஒன் நாற்காலியை கைப்பற்ற முன்னேறிக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து யார் கண் வைத்தார்களோ, தொப்புள் விவகாரம் நஸ்ரியாவுக்கு வேகத்தடையாகி விட்டது. அதில் விழுந்தவர் தட்டுத்தடுமாறி மீண்டும் எழும்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் புதிய படங்களில் நடிக்க கோடிக்கணக்கில் நஸ்ரியா சம்பளம் கேட்பதாக கோலிவுட்டில் சூடான செய்தி பரவிக்கிடக்கிறது. இந்த சேதி நடிகையின் காதுகளுக்கும் போக, அதிர்ச்சியில் ஆடிப்போய் இருக்கிறாராம்.
வில்லங்கமான நடிகை என்று பரவிய தவறான கருத்தை இப்போதுதான் படிப்படியாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக குண்டை தூக்கிப்போட்டால், அடுத்து எனக்கு யார் படம் தருவார்கள் என்று புலம்புகிறாராம் நஸ்ரியா.
அதோடு, மீண்டும் தன் மீதான அதிருப்தி அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக, தன்னை வைத்து படம் தயாரிக்கப்போகிறவர்களை தொடர்பு கொண்டு, யாரோ எனக்கு வேண்டாதவர்கள் இப்படி தாறுமாறாக கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். தயவு செய்து யாரும் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம்.

பொங்கலுக்கு கோச்சடையான் களமிறங்குவாரா? சீரியஸ் டிஸ்கஷன்!!


2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், திடீரென்று ஜனவரி 10-ந்தேதியே கோச்சடையான் வெளிவரயிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதனால் விஜய், அஜீத் படங்களுக்கிடையே முக்கிய தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், ரஜினி படமும் திரைக்கு வர இருப்பதை அறிந்த சில தியேட்டர் அதிபர்கள் தங்கள் தியேட்டரில் எந்த படத்தை ரிலீஸ் செய்வது என்பதில் குழம்பிப்போயிருக்கிறார்கள். இதனால் தியேட்டர்களை கைப்பற்றுவதில் இன்னும் பலத்த போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இப்படி மூன்று பிரபல நடிகர்களின் படங்களும் ஒரே நேரத்தில் வெளிவருவது வசூல்ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சில முக்கியஸ்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால் கோச்சடையானை பொங்கலுக்கு பிறகு வெளியிடலாமா? என்று சம்பந்தப்பட்டவர்கள் விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி கோச்சடையான ஆடியோவை வெளியிடும்போது படத்தின் ரிலீஸ் பற்றிய தகவலை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

விஜயகாந்த் பட டைட்டிலில் நடிக்கிறார் அதர்வா!


ஏற்கனவே வெளியான ஹிட் படங்களின் டைட்டில்களில் மீண்டும் நடிப்பதில் இப்போதைய ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில், ரஜினி நடித்த மாப்பிள்ளை, நான் மகான் அல்ல, தில்லுமுல்லு உள்பட பல படங்களின் டைட்டில்களில் மீண்டும் சமீபத்தில் படங்கள் வெளிவந்தன. இந்த நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் நடித்த ஈட்டி என்ற பட டைட்டிலில் இப்போது ஒரு படம் தயாராகிறது. அப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை டைரக்டர் வெற்றிமாறன், மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு மார்க்கெட்டில் இருக்கிற நடிகையாக தேடி வந்தவர்கள், இப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகியான ஸ்ரீதிவ்யாவை புக் பண்ணியுள்ளனர். பென்சில், வீரதீரசூரன் படங்களில் நடித்து முடித்தும் இந்த படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம் திவ்யா.
மேலும், விஜயகாந்த் படத்தின் தலைப்பு வைத்திருப்பதால் அப்படத்தின் கதையோடு இப்படத்துக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரித்தபோது, தலைப்புதான் ஈட்டியே தவிர இதற்கும், அந்த படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார்கள்.
மேலும், இன்றைய காலகட்டத்திற்கேற்ற கதையில் உருவாகும் ஈட்டி, நல்லதொரு மெசேஜை சொல்லும் விதத்தில் உருவாகிறதாம்.

இம்சை அரசன் இயக்குனரின் அடுத்த இம்சை ரெடி!


Oru-Kanniyum-Moonu-Kalavaanigalum-first-look-300x143

தலைப்பை பார்த்ததும் பயந்துவிடாதீர்கள்! இயக்குனர் சிம்புதேவனின் காமெடி இம்சையைத்தான் அப்படிச் சொன்னோம். இம்சை அரசன் 23 ம் புலிக்கேசி, இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம், அறை எண் 305 ல் கடவுள் போன்ற படங்கள் மூலம், மக்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனர் சிம்புதேவனின் அடுத்த படம் இதோ ரெடியாகிவிட்டது. ”ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்” என்பது படத்தின் பெயர்.
அருள்நிதி – பிந்துமாதவி இப்படத்தில் நடிக்கின்றனர். சிம்புதேவன் என்றாலே, வித்தியாசமான காமெடிக்கதைகளை வழங்குவார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை! இப்படத்திலும் அது உண்டு என்கிறார்கள்! நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையை காமெடி கலந்து சொல்லியிருக்கிறாராம் இயக்குனர்.
அத்தோடு இப்படத்தில் ஒரு முக்கிய மெஸ்ஸேஜ் உண்டாம்! அது என்ன வென்றால், “நமக்குன்னு இருக்கும் விஷயங்களை நாம் இழந்துவிடக்கூடாது” இதுதானாம் மெஸ்ஸேஜ். பார்க்கலாம், தான் சொல்ல நினைப்பதை சரியான முறையில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்கிறாரா சிம்பு தேவன்? என்று!

பாராட்டு மழையில் விஜய்




விஜய்யின் நடனத்தைப் பார்த்து பிரமித்து போயுள்ளாராம் பிரிட்டிஷ் மொடல் அழகி.பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்திற்காக விஜய்யும் – பிரிட்டிஷ் மொடல் அழகி ஸ்கேர்லட் வில்சனும் இணைந்து ஆட்டம் போட்டிருக்கும் பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். நடனத்தில் தூள் கிளப்பும் விஜய்யுடன் நடனம் ஆடியிருப்பது குறித்து ஸ்கேர்லட் தனது மைக்ரோ ப்ளாகில், ‘‘விஜய் இஸ் கிரேட் டான்சர்’ அவருடன் ஆடிய டான்ஸை நீங்கல்லாம் ரொம்பவும் என்ஜாய் பண்ணுவீங்கன்னு நம்பறேன்.சென்னை எனக்கு நிறைய அன்பை தந்தது. அதை மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஜில்லா பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்க ரெடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது - See more at: http://www.cinebeeps.com/archives/5121#sthash.rEqXYqsd.dpuf

புகார் கொடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்த நபரை கைது செய்த போலீசாருக்கு நன்றி: ஸ்ருதி



தன் வீட்டுக்கு வந்து தன்னை தாக்கியவரை கைது செய்த போலீசாருக்கு ஸ்ருதி ஹாஸன் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி காலை மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஸ்ருதி ஹாஸன் வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் அவரின் கழுத்தை நெறித்து தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஸ்ருதி கடந்த 21ம் தேதி இரவு போலீசில் புகார் கொடுத்தார்.
அவர் புகார் கொடுத்த 48 மணிநேரத்திற்குள் விரைந்து செயல்பட்ட போலீசார் நேற்று அந்த நபரை கைது செய்தனர். அசோக் த்ரிமுகே(32) என்னும் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில்,
நான் ஸ்ருதி தங்கியிருக்கும் வீட்டில் உள்ள காவலாளிகள் வைத்திருக்கும் பதிவேட்டில் எனது பெயரை எழுதிவிட்டு தான் அவரது வீட்டுக்கு சென்றேன். எனது சகோதரருக்கு வேலை கேட்டு சென்றேன். அவரை தாக்கும் எண்ணத்தில் செல்லவில்லை. அவர் என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்திவிட்டார் என்றார்.
அசோக் பிலிம் சிட்டியில் ஸ்பாட் பாயாக வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அசோக்கை கைது செய்த மும்பை போலீசாருக்கு ஸ்ருதி ஹாஸன் ட்விட்டரில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.