5.12.13

Ajith Kumar's Veeram - Official Teaser No.2

ஆர்யா- கிருஷ்ணாவை இயக்கும் விஷ்ணுவர்தன்

ஏதாவது ஒரு விதத்தில் தன் படங்களில் ஆர்யா இருந்தால் அதிர்ஷ்டம் என்ற நினைப்பு இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு.
முதல் படமான அறிந்தும் அறியாமலும் தொடங்கி, ஆரம்பம் வரை தான் இயக்கிய 5 படங்களில் நான்கில் ஆர்யா இருக்கும்படி பார்த்துக் கொண்டவர் விஷ்ணுவர்தன்.
அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் என நான்கு படங்களில் ஆர்யாதான் ஹீரோ.

ஆர்யா- கிருஷ்ணாவை இயக்கும் விஷ்ணுவர்தன்

இப்போது அடுத்து தான் இயக்கும் புதிய படத்திலும் நாயகனாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இன்னொரு ஹீரோவாக விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா நடிக்கிறார். அண்ணன் இயக்கத்தில் தம்பி நடிப்பது இதுதான் முதல் முறை.
அஜித், ஆர்யா என்று ஸ்டார் ஹீரோக்களை இயக்கும் நீங்கள் ஏன் உங்கள் தம்பியை இயக்கவில்லை என்று விஷ்ணுவர்தனிடம் பல முறை கேட்கப்பட்டது. பொருத்தமான ஸ்க்ரிப்டுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லி வந்த விஷ்ணுவர்தன், இப்போதுதான் அப்படியொரு ஸ்க்ரிப்ட் வந்திருப்பதாகக் கூறி கிருஷ்ணாவை அழைத்துள்ளார்.
'வானவராயன் வல்லவராயன்' படத்தில் நடிக்கும் கிருஷ்ணாவுக்கு, அண்ணனிடம் இருந்து வந்துள்ள இந்த அழைப்பு உற்சாகத்தைத் தந்துள்ளதாம்.

பாய் பிரண்டுக்கு விபத்து... தாத்தா மரணம்.. நமீதாவை அடுத்தடுத்து தாக்கிய சோகம்!

சென்னை: பாய் பிரண்டுக்கு விபத்து, தாத்தா மரணம் என அடுத்தடுத்து தாக்கிய சோகங்களால், சொந்த ஊரான சூரத்துக்குக் கிளம்பிப் போயிருக்கிறார் நடிகை 


நமீதாவின் நெருங்கிய நண்பரும் பிஸினஸ் பார்ட்னருமான கபூர் மும்பை விபத்தில் பலத்த அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிட்டத்தட்ட நாற்பது தையல்கள் போடப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நேரத்தில் நமீதாவின் அன்புக்குரிய தாத்தா வசந்த் நேற்று சூரத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84. நமீதாவிடம் ரொம்பப் பாசமாக இருப்பாராம் இந்த தாத்தா.
ஏற்கெனவே வருத்தத்திலிருந்தவரை, இந்த சோகம் பெரிதாகத் தாக்க, சூரத்துக்குப் பறந்திருக்கிறார் நமீதா.

ஒவ்வொரு குழந்தைக்கும் இசைக் கல்வி முக்கியம்! - ஏ ஆர் ரஹ்மான்

மன்ஹாட்டன்: ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்கும் இசைக் கல்வி மிக முக்கியம். அதற்காக என்னாலான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என்றார் ஏஆர் ரஹ்மான்.
ஆஸ்கர் விருதுபெற்ற தமிழ் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரிலுள்ள மிகப் பிரபலமான ஆடியோ மற்றும் இசைக் கருவிகளை விற்பனை நிறுவனமான ஹார்மென் இண்டர்நேஷனல் ஸ்டோருக்குச் சென்றிருந்தார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் இசைக் கல்வி முக்கியம்! - ஏ ஆர் ரஹ்மான்

அங்கு ஏராளமான இந்திய, வெளிநாட்டு ரசிகர்கள் ரஹ்மானைச் சந்திக்க கூடியிருந்தனர்.
அப்போது, ஹார்மென் இண்டர்நேஷனல் சி.இ.ஓ. தினேஷ் பாலிவால், தங்க மூலாம் பூசப்பட்ட ஜே.பி.எல். ஹெட்போனை அவருக்கு பரிசாக வழங்கினார். மேலும், ஹார்மென் கம்பெனியின் இந்தியாவிற்கான விளம்பர தூதுவராக ரஹ்மான் இருப்பார் என்றும் அவர் கூறினார்.
அங்கு கூடியிருந்தோர் மத்தியில் ரஹ்மான் பேசுகையில், இசைக்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அவர் கூறுகையில், "ஒரு வீட்டில் இசைப் பயிற்சி எடுப்பதால் மட்டும் அந்தக் குழந்தை இசையை நன்றாக கற்றுகொள்கிறது என்று அர்த்தமல்ல. ஒரு குழந்தை நன்றாக இசை கற்கிறது என்றால் அவனுக்கு இசையை பற்றிய சரியான கல்வி அறிவும் இருக்கிறது என்று அர்த்தம்.
எனது இசைப் பள்ளி முயற்சி, இசைக் கல்வியைக் கற்கும் முனைப்பை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியிருப்பதை உணர்கிறேன். அதற்கான ஊக்கம் அவர்கள் மத்தியில் தெரிகிறது.
துபாய், மலேசியா நாடுகளிலும் இசைப் பள்ளியை தொடங்குவதற்கு நடவடிக்கைகளில் இறங்கியுள்லளேன்.
என்னை பொறுத்தவரை ஒரு இசைப்பள்ளி என்பது ஒரு குடும்பத்தை போன்றது. இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் இசைக் கல்வி பெற வேண்டும் என விரும்புகிறேன்.
எந்த குழந்தையும் தானாகவே வளரும் என்று என்று விட்டுவிடமுடியாது. நீங்கள் அவர்கள் மீது கவனம் கொள்ள வேண்டும். அதையே நீங்கள் இசைப்பள்ளியிலும் பின்பற்றவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் கே.எம். மியூசிக் கன்சர்வேடரி என்ற இசைக் கல்வி நிறுவனத்தை ரஹ்மான் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையிலும், புறநகரிலும் இந்த இசைக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது.

கல்யாணம் பண்ணிக்கோ… அட்வைஸ் செய்த தளபதி


சென்னை: மும்பையில் குடியேறி வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார் வடுமாங்காய் நடிகை. மீண்டும் வாழ்வு கொடுத்த தமிழில் கால் பதிக்கலாமா என்ற எண்ணத்தில் தளபதி நடிகரை தொடர்பு கொண்டுள்ளார்.

பழைய பாசத்தில் வாய்ப்பு கொடுப்பார் என்று எண்ணி செல்லில் தொடர்பு கொண்டவருக்கு பதில் ஏமாற்றம் தந்ததாம். வாய்ப்பு இல்லாவிட்டால் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடு என்பதுதான் தளபதி சொன்ன பதிலாம்.

எதற்கு இப்படி என்று விசாரித்தால் ‘ஸ்லீப்பர் செல்' படத்திற்கு முதலில் அணுகியது வடுமாங்காய் நடிகையைத்தானாம். பாலிவுட்டில் பிஸி... 2 ஆண்டுகளுக்கு நோ கால்ஷீட் என திருப்பி அனுப்பிவிட்டு மும்பையில் பிசினாக ஒட்டிக்கொண்டாராம்.

அதற்கு பழிவாங்கத்தான் இப்படி வலிய வந்து வாய்ப்பு கேட்டும் வாசல் கதவை சாத்தினாராம் தளபதி. ஹிட் ஜோடி என்று பேசப்பட்ட இந்த ஜோடி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

எப்ப பார்த்தாலும் நான் தான் கிடைச்சேனா?: குமுறும் நடிகை

சென்னை: சிங்கத்தின் தற்போதைய நாயகி தன்னை பற்றி வரும் வதந்திகளால் கடுப்பாகியுள்ளாராம்.
லிங்கமான இயக்குனரின் படத்தில் சிங்கத்திற்கு ஜோடியாக டோலிவுட்டின் முன்னணி நடிகை நடித்து வருகிறார். அம்மணி பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் களைப்பு ஏற்பட்டதாலும், சக்திவாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்று படப்பிடிப்பில் வேலை பார்த்ததாலும் அவரது உடல் நிலை சற்று பாதிக்கப்பட்டு 2 நாட்கள் ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தோல் வியாதி தீவிரமாகிவிட்டது என்று செய்திகள் வந்தன. இதை பார்த்த நடிகை கடுப்பாகிவிட்டாராம்.
ஒன்று யாருடனாவது காதல் என்று வதந்தியை பரப்புகிறார்கள் இல்லை என்றால் தோல் வியாதி என்று கூறுகிறார்கள். ஒரு மனுஷிக்கு களைப்பு ஏற்பட்டு ஓய்வெடுக்கக் கூட கூடாதா என்று குமுறுகிறாராம்.

Beautiful Natural Wallpaper In Hd Part 3













Beautiful Natural Wallpaper In Hd Part 2




















Beautiful Natural Wallpaper In Hd Part 1