12.11.13

உடற்பயிற்சிக்குப் பிறகு தக்காளி ஜூஸ் அருமை!

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பலர் சக்தி பானம் என்று எதைஎதையோ குடித்து உடலைத் தேற்றி வருகின்றனர். ஆனால் தக்காளி ஜூஸ் அருமையான எனெர்ஜி டிரின்க் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கடுமையாக உடற்பயிற்சி விளையாட்டு வீரர்கள் உட்பட சாதாரண மனிதர்களுக்கும் தேவைதான், ஆனால் அதன்பிறகு தேவைப்படும் எனெர்ஜியக் கொடுக்க, அதாவது இறுகிய தசைகள் ரிலாக்ஸ் ஆகவும், ரத்த ஓட்டம் மீண்டும் நார்மலாகவும் தக்காளி ஜூஸ்தான் சிறந்தது என்கிறது இந்த ஆய்வு.

மேலும் கிரீஸில் 15 தடகள வீரர்களை வைத்து இந்த பரிசோதனை செய்யப்பட்டதில் தக்காளி ஜூஸ் உடனடி எனெர்ஜி கொடுப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

தக்காளி ஜூஸ் குடித்தவுடன் குளூக்கோஸ் அளவு விரைவில் நார்மலடைவதை இந்த ஆய்வு கண்டு பிடித்துள்ளது.

தக்காளியில் உள்ள 'லைக்கோபீன்' என்ற ரசாயனம் அதன் சிகப்பு நிறத்தைக் கொடுக்கிறது. சிகப்பு நிறமான எதுவும் உடலுக்கு நல்லதுதான்.

வைட்டமின்கள் பல அடங்கிய தக்காளி புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளை தடுக்கவல்லது.

தசை மற்றும் மூளை பழுதடைவதற்குக் காரணமாகும் சில சுரப்பிகளின் தீமையான அளவை தக்காளி ஜூஸ் குறைக்கிறது.

உடலின் நச்சுத் தன்மையை தக்காளி ஜூஸ் கடுமையாகக் குறைப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

ப‌சி‌யி‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் க‌றிவே‌ப்‌பிலை!

க‌றிவே‌ப்‌பிலை, சு‌க்கு, ‌மிளகு, ‌தி‌ப்‌பி‌லி, காய‌ம், இ‌ந்து‌ப்பு சம அளவு எடு‌த்து பொடி செ‌ய்து, சுடுசாத‌த்‌தி‌ல் கல‌ந்து நெ‌ய் ‌வி‌ட்டு ‌பிசை‌ந்து சா‌ப்‌பிட ‌ப‌சி‌யி‌ன்மை, உண‌வி‌ல் வெறு‌ப்பு, பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய் கும‌ட்ட‌ல் ஆ‌கியவை குணமாகு‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கு‌ம் இ‌ந்த சாத‌த்தை ‌சி‌றிய அள‌வி‌ல் கொடு‌த்து வரலா‌ம்.

க‌றிவே‌ப்‌பிலை ஈ‌ர்‌க்குட‌ன் சே‌ர்‌த்து இடி‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து ‌கிரா‌ம்பு, ‌தி‌ப்‌பி‌லி பொடியை சே‌ர்‌த்து குழை‌த்து தர குழ‌ந்தைகளு‌க்கு உ‌ண்டாகு‌ம் வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ந‌ன்கு ப‌சியெடு‌க்கு‌ம்.

க‌றிவே‌ப்‌பிலை, ‌மிளகு, ‌சீரக‌ம், வெ‌ந்தய‌ம், சு‌ண்டை வ‌ற்ற‌ல், சூரண‌த்து உ‌ப்பு சே‌ர்‌த்து உ‌ண‌வி‌ல் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வர ம‌ந்த‌ம் ‌நீ‌ங்‌கி ப‌சி உ‌ண்டாகு‌ம்.

க‌‌றிவே‌ப்‌பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செ‌ய்து ‌தினமு‌ம் உ‌ட்கொ‌ண்டு வர, செ‌ரியாமை, ப‌சி‌யி‌ன்மை, க‌ழி‌ச்ச‌ல் இவ‌ற்றை‌ப் போ‌க்கு‌ம். தலைமுடியை ‌நீ‌ண்டு வளர‌ச் செ‌ய்யு‌ம். 

மூலிகைகளின் அற்புதங்கள்

கீழாநெல்லி : 

தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்ல மருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்றகல்லீரலை மீட்கிறது.

துளசி:

மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைûஸ எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி, ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரிக்க, அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. ஆஸ்துமா நோயாளிகளின் நண்பன். 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் பல் கூசுதல் தொண்டை புண் தொண்டைச்சளி குணமடையும்.

கரிசலாங்கண்ணி:

கல்லீரலில் ஏற்படும் புண், வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண், தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது. ஹெபடைடில் ஏ.பி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் இருமலை மட்டுப்படுத்தும் அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரமிருமுறைஉண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும். இலைகள் கைப்பிடியளவு சிறிது உப்பு சேர்த்து மண் பானையிலிட்டு வதக்கி நாய் கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து அதே இலையை வைத்து கட்டினால் நஞ்சு முறிந்து விடும்.

பிரண்டை:பிரண்டை சாறு கருப்பைக் கட்டிக்கு மருந்து. பைலோரி என்னும் கிருமி உண்டாக்கும் வயிற்றுபுண்னை ஆற்ற வல்லது. பசியை தூண்டும்.

அதிமதுரம்:

நாவறட்சி தொண்டைக்கட்டு வறட்டு இருமலுக்கு “டாக்டர்” குடல் புண்னை ஆற்றும். இனிப்பு, சர்க்கரைக்கு பதிலாக அதிமதுரத்தை பயன்படுத்தலாம்.

அருகம்புல்:

ரத்த கொலஸ்டிராலைக் குறைக்க, உடல் எடை குறைய உதவும் நச்சுக்களால் உடலில் ஏற்படும் திடீர் அரிப்பு நோய் ஒவ்வாமை நோய்க்கு அருகம்புல் சாறு 100மி தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட 15 நாளில் பலனுண்டு.

நன்றி: பசுமை இந்தியா, ஆகஸ்ட் மாத இதழ்

நீரிழிவு; பழங்களை சாப்பிட்டார் தீர்வு, ஜூஸ் என்றால் ஆபத்து

திராட்சை இனிப்பான பழமென்றாலும், இனிப்பு நீர் ஆபத்தைக் குறைக்க அது உதவுகிறது

பழங்களை தினமும் உண்பதால் டைப் 2 டயபடீஸ் எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

சுமார் இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

'இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு உங்க 22 வயசுன்னே சொல்லிக்கிட்டிருப்பீங்க!'

வேலூர்: இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு 22 வயசுன்னே சொல்லிக்கிட்டிருப்பீங்க என்று நடிகர் விஷாலை மடக்கினர் நிருபர்கள்.
பாண்டிய நாடு வெற்றியை திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார் விஷால்.
வேலூரில் ஒரு திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்துவிட்டு, நிருபர்களிடம் பேசினார்.
"என்னுடைய தொழில் நடிப்பது. என்னுடைய தெய்வமாகிய ரசிகர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன்," என வழக்கமாக ஆரம்பித்தவரிடம், 'உங்களுடைய திருமணம் எப்போது?' என்று நிருபர்கள் கேட்டனர்.
எனக்கு இப்போதுதான் 22 வயதாகிறது. இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதன் பின்னர் திருமணம் செய்வேன்,' என்றார்.
4 ஆண்டுகளுக்கு முன்னரும் 22 வயதுதான் என்றீர்கள். இப்போதும் 22 வயது என்றால் எப்படி? என்று நிருபர் மடக்கியபோது, அருகில் இருந்த இயக்குநர் சுசீந்திரன் 'இன்னும் 4 ஆண்டுகள் கழித்தாலும், இவர் அதே வயதைத்தான் கூறுவார்,' என்றார் தமாஷாக.

அஜீத் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி: குஷ்பு

சென்னை: சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜீத் குமார் தான் தன்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் ஹீரோக்கள் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிப்பது சகஜம். ஆனால் நம் நாட்டில் எந்த உட்டானாலும் எத்தனை வயதானாலும் ஹீரோக்கள் டை அடித்து கருப்பு முடியுடன் நடிப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தில்லாக நடித்து வருகிறார் அஜீத் குமார். அவரை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியுடன் சிலர் ஒப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆரம்பம் படம் அருமையான பொழுதுபோக்கு படம். அஜீத் அருமையாக உள்ளார். அவரின் குளோசப் ஷாட்டை பார்த்த போதெல்லாம் என் இதயத்துடிப்பு அதிகரித்தது. அவர் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவை நெகிழ்த்திய விளம்பரம்... விதவைத் திருமணத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம்!



ஒரு நகைக்கடை விளம்பரம், த்ரிஷாவை நெகிழ்த்தியதோடு, ஒரு சீரியஸான பிரச்சினைக்காக பிரச்சாரமும் செய்ய வைத்துள்ளது.
சமீபத்தில் ஒளிபரப்பாகிவரும் அந்த விளம்பரத்தில், ஒரு விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் மணமகன், அந்தப் பெண்ணின் இளம் மகளையும் தன் மகளாகவே ஏற்றுக் கொள்கிறான்.
இதைப் பார்த்து நெகிழ்ந்த த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் இது போன்ற விதவைத் திருமணங்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது ரசிகர்கள் இதுபோன்ற திருமணங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விளம்பரத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவது திருமணம் குறித்து தனது ஆழமான கருத்தை பதிவு செய்ததோடு தனது ரசிகர்களுக்கும் பெண்களின் இரண்டாவது திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
பெண்கள் ஆண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்வதுபோல, ஆண்களும் பெண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்பதுதான் சிறந்தது என அவர் கூறியுள்ளார்.
- See more at: http://www.tamil.thecinemanews.com/2013/11/blog-post_3267.html#sthash.B35i8SNY.dpuf

தமிழ்ப் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்: ஹிருத்திக் ரோஷன்

வாய்ப்புக் கிடைத்தால் தமிழ்ப் படத்தில் நடிக்க காத்திருக்கிறேன் என பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கூறினார்.

ஃபிலிம் கிராப்ட் இண்டர்நேஷனல் நிறுவனம் பாலிவுட்டில் தயாரித்துள்ள படம் "க்ரிஷ் 3'. 
ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே, கங்கனா ராவனத் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ராகேஷ் ரோஷன் எழுதி, இயக்கியுள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகியுள்ள இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை படைத்துள்ளது.
"க்ரிஷ் 3' படம் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வரும் ஹிருத்திக் ரோஷன், திங்கள்கிழமை சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது:
பல திரையரங்குகளில் "க்ரிஷ் 3' வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை சந்தித்து வருகிறேன். ஆனால் சென்னை ரசிகர்களின் அன்பு, எப்போதும் என்னை நெகிழ வைக்கிறது. 
சென்னை வரும் போதெல்லாம், தமிழ் படத்தில் எப்போது நடிப்பீர்கள் என்றுதான் கேட்பார்கள். அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கிறேன்.
வாய்ப்பு கிடைத்தால் விரைவில் நேரடி தமிழ் படத்தில் நடிப்பேன். அந்தப் படத்தை நானே தயாரிக்கவும் ஆவலாக இருக்கிறேன்.
தமிழ் நடிகர்களை அப்படத்தில் பெருமளவில் பயன்படுத்துவேன். அடுத்து நடிக்கவுள்ள படத்தில், தமிழ் கலைஞர்களின் பங்கு பெருமளவில் இருக்கும்.
ரசிகர்கள் எந்த மாதிரியான படங்களை எதிர்பார்க்கிறார்களோ, அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன்.சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து "கிரிஷ் 3' படம் உருவாகியுள்ளது.
சூப்பர் ஹீரோ என்பதால் சூப்பர் ஹீரோயின் யார் என கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அம்மா, மனைவி, சகோதரி ஆகியோரே சூப்பர் ஹீரோயின்கள் என்றார் ஹிருத்திக் ரோஷன்.
கிரிஷ் 3 படத்தின் இயக்குநர் ராகேஷ் ரோஷன், ஒளிப்பதிவாளர் திரு, படத்தின் தமிழக விநியோக உரிமையை பெற்றுள்ள சிபு உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உடனிருந்தனர்.  

Irandaam Ulagam - Kani Mozhiyae Official Song Teaser ft. Arya; Anushka S...


Lord Shiva Hd Wallpapers






























Lord Jai Shri Ram Hd Wallpapers







Lord krishna Latest HD Images