28.11.13

பழனி முருகன் கோயிலில் நயன்தாரா-உதயநிதி சாமி தரிசனம்!


ஐயா படத்தில் தமிழுக்கு வந்த நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவரது நிஜப்பெயர் டயானா மரியம் குரியன். தமிழுக்கு வந்த ஆரம்ப காலத்தில் தினமும் நடிக்க வருவதற்கு முன்பு தனது அறையில் பைபில் படித்த பிறகுதான் கேமரா முன்பு வருவார்.
அப்படிப்பட்ட நயன்தாரா, பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்ய தயாரானபோது, இந்து மதத்துக்கு மாறினார். இதனால் கேரளாவிலுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது எதையும் செவிகொடுத்து கேட்கவில்லை அவர்.
இருப்பினும், பிரபுதேவா-நயன்தாரா திருமணம் நடைபெறவில்லை. ஆனபோதும், தொடர்ந்து இந்து ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் நயன்தாரா.
அந்த வகையில், நேற்று முன்தினம் உதயநிதியுடன் அவர் நடித்து வரும் இது கதிர்வேலன் காதல் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றபோது, நயன்தாரா, உதயநிதி, டைரக்டர் பிரபாகரன் ஆகியோர் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்களாம்.
கோயிலுக்கு நயன்தாரா வந்திருக்கிறார் என்கிற செய்தி காட்டுத்தீ போல் பரவியதும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் மொத்தமும் அவர்களை சூழ்ந்து விட்டார்களாம். இதனால் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்து விட்டு, பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினார்களாம்.

No comments:

Post a Comment