28.11.13

நான் ரொம்ப நல்லவங்க! தனக்குத்தானே சான்றிதழ் கொடுக்கும் ஆர்யா!!



நடிகர் ஆர்யா ரொம்ப ஜாலி பேர்வழி. அவர் இருக்கிற இடம் ஒரே கலகலப்பாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள். அதோடு, சிலரைப்போன்று ஈகோவெல்லாம் பார்க்க மாட்டார். பெரிய நடிகர்களோ, சிறிய நடிகர்களோ அனைவரிடமும் ஒரே மனநிலையுடன் தான் பழகுவார் என்றெல்லாம் அவரைச்சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், சமீபகாலமாக ஆர்யாவைப்பற்றி, பிரியாணி கொடுத்தே நடிகைகளை பிக்கப் பண்ணி விடுவார் என்கிற சேதியை சில நடிகர்களே மேடைகளில் சொன்னதால், ஆர்யாவை நெருங்கவே சில புதுமுக நடிகைகள் மிரண்டு கிடக்கிறார்களாம்.
இவரே தேடிச்சென்று பேசினாலும், அவர்கள் தயங்கி தயங்கியே பேசுகிறார்களாம். தன்னைப்பற்றி பரவிக்கிடக்கும் பிக்கப் செய்திதான் இப்படியொரு நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதை புரியத் தொடங்கியிருக்கிறார் ஆர்யா.
அதனால், தனது அபிமானத்திற்குரிய சில நடிகர்களை, நீங்கள் என்னைப்ப்றறி ஜாலிக்காக பேசுவதுகூட என்மீது மற்றவர்கள் மத்தியில் தவறான இமேஜை ஏற்படுத்தி விடுகிறது.
அதனால் இனிமேல் விளையாட்டாகக்கூட அப்படி பேசாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம் ஆர்யா. அதோடு, தயங்கி நிற்பவர்களிடம், ஜாலிக்காக பேசினதை பெருசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நிஜத்தில் நான் ரொம்ப நல்லவுங்க. அது தூரத்துல நிற்கும்போது தெரியாது.
எங்கிட்ட நெருங்கி வந்து பேசி பழகிறபோதுதான் தெரியும். சந்தேகமா இருந்தா, எங்கிட்ட நெருங்கி பழகிற நடிகர்-நடிகைங்ககிட்ட கேட்டுப்பாருங்க என்கிறாராம் நடிகர்.

No comments:

Post a Comment