27.11.13

டிவி நடிகையிடமிருந்து கணவனை மீட்டுத் தரக்கோரி கர்ப்பிணிப் பெண் புகார்!

சென்னை: டிவி நடிகையிடமிருந்து தனது கணவனை மீட்டுத் தருமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கர்ப்பிணிப் பெண் புகார் கொடுத்தது பரபரப்பைக் கிளப்பியது.
சென்னை புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அந்தமானில் இருந்து வந்த செல்வராணி என்ற கர்ப்பிணி பெண், அழுது கொண்டே மனு ஒன்றை கொடுத்தார்.
தனது கணவர் பூமிநாதனை, சென்னையைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, ஆட்டிப் படைப்பதாகவும், அவரை தொலைக்காட்சி நடிகையிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
தொலைக்காட்சி நடிகை தன்னை செல்போனில் மிரட்டுவதாகவும், அந்த பெண் மனுவில் தெரிவித்து இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் முடிந்த தங்கம் சீரியலில் இந்த பூமிநாதன் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன், காவேரி உள்பட நிறைய நடிகைகள் இந்த சீரியலில் இருந்தனர். ஆனால் நடிகையின் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment