27.11.13

என்னை தாக்கிய நபர் ஒன்றும் வேலை கேட்டு வரவில்லை: ஸ்ருதி ஹாஸன்

தன்னை தாக்கிய நபர் வேலை கேட்டு வந்ததாக கூறுவதில் உண்மை இல்லை என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
மும்பை பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து தங்கியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாஸன். இந்நிலையில் கடந்த 19ம் தேதி காலை அவரது வீட்டுக் கதவை ஒருவர் தட்டினார். கதவை திறந்த ஸ்ருதியை அவர் கழுத்தை நெறித்து தாக்கினார். இது குறித்து ஸ்ருதி அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த நபர் அசோக் த்ரிமுகே என்பதை அடையாளம் கண்டு அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


பிலிம் சிட்டியில் ஸ்பாட் பாயாக இருந்த அந்த நபர் போலீஸ் விசாரணையில், தான் தனது சகோதரருக்கு வேலை கேட்டு ஸ்ருதியை பார்க்கச் சென்றதாகவும், அவரை தாக்க வேண்டும் என்று செல்லவில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் ஸ்ருதி இது குறித்து கூறுகையில்,
செட்டில் இருந்தபோதெல்லாம் அவர் என்னையோ எனது ஊழியர்களையோ வேலை கேட்டு அணுகவில்லை. அவர் அப்படியே வேலை கேட்டு வந்திருந்தால் நாங்கள் அது குறித்து பரிசீலித்திருப்போம். ஆனால் மும்பையில் தனியாக வசிக்கும் என் வீட்டுக்குள் புகுந்ததால் தான் சீரியஸாக எடுத்துக் கொண்டேன். எனக்கு மும்பை போலீசார் மீது நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு இது குறித்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்றார்.

No comments:

Post a Comment