25.11.13

தாறுமாறாக யாரோ கொளுத்திப்போட்டு விட்டனர்! -புலம்புகிறார் நஸ்ரியா

நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா, யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக புதிய படங்களை கைப்பற்றி நம்பர்-ஒன் நாற்காலியை கைப்பற்ற முன்னேறிக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து யார் கண் வைத்தார்களோ, தொப்புள் விவகாரம் நஸ்ரியாவுக்கு வேகத்தடையாகி விட்டது. அதில் விழுந்தவர் தட்டுத்தடுமாறி மீண்டும் எழும்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் புதிய படங்களில் நடிக்க கோடிக்கணக்கில் நஸ்ரியா சம்பளம் கேட்பதாக கோலிவுட்டில் சூடான செய்தி பரவிக்கிடக்கிறது. இந்த சேதி நடிகையின் காதுகளுக்கும் போக, அதிர்ச்சியில் ஆடிப்போய் இருக்கிறாராம்.
வில்லங்கமான நடிகை என்று பரவிய தவறான கருத்தை இப்போதுதான் படிப்படியாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக குண்டை தூக்கிப்போட்டால், அடுத்து எனக்கு யார் படம் தருவார்கள் என்று புலம்புகிறாராம் நஸ்ரியா.
அதோடு, மீண்டும் தன் மீதான அதிருப்தி அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக, தன்னை வைத்து படம் தயாரிக்கப்போகிறவர்களை தொடர்பு கொண்டு, யாரோ எனக்கு வேண்டாதவர்கள் இப்படி தாறுமாறாக கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். தயவு செய்து யாரும் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம்.

No comments:

Post a Comment