25.11.13

ஆபாச காட்சியில் கத்தரி வைக்க சொன்ன நயன்தாரா!

தமிழில் ராஜாராணி, ஆரம்பம் என்று மறுபிரவேசம் செய்திருக்கும் நயன்தாரா, அனாமிகா படத்தில் ஆக்சன் கோதாவில் குதித்திருக்கிறார். இந்த நேரத்தில், ஆரம்பம் படத்தில் ஒரு காட்சியில் ஆபாசமாக நடித்திருந்தார் நயன்தாரா.
அதைப்பார்த்த சில அபிமானிகள், அந்த காட்சி உங்களை செக்ஸி நடிகையாக பிரதிபலிக்கிறது என்று அதிர்ச்சி செய்தி வாசித்தார்களாம். இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த நயன்தாரா, சம்பந்தப்பட்ட பட டைரக்டரிடம், அந்த காட்சியை கத்தரித்து தனது இமேஜை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டாராம்.
அவரது உணர்வுகளை புரிந்து கொண்ட ஆரம்பம் இயக்குனரும் பின்னர் அந்த ஆபாச காட்சியை கட் பண்ணி விட்டாராம்.
இதேபோல், சில தெலுங்கு படாதிபதிகள் பழைய ஞாபகத்தில் நயன்தாராவை கவர்ச்சி என்ற பேரில் ஆபாச குதிரையாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்களாம். அதோடு அனாமிகா படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கியிருக்கும் நயனின் சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்துவதாகவும் ஆசை காட்டினார்களாம்.
ஆனால், பில்லா பிகினி எல்லாம் பழைய கதையாகி விட்டது. இனிமேலும் நான் அப்படி நடித்தால் நான் கஷ்டப்பட்டு பாதுகாத்து வரும் சீதை இமேஜ் பாழாகி விடும் என்று நாசுக்காக சொல்லி நச்சரித்தவர்களை துரத்தியடித்து விட்டாராம்.
அதோடு, புதிதாக தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், ஆடை குறைப்பு, ஆபாசம் இல்லாத கதையாக இருந்தால் மட்டுமே சொல்லுங்கள். இல்லையேல் வந்தவழியே திரும்பிச்சென்று விடுங்கள் என்றும் நெத்தியடியாக சொலகிறாராம் நயன்தாரா.

No comments:

Post a Comment