16.11.13

பெண்களுக்கு வித்யா பாலன் அறிவுரை


பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு, நடிப்பை தாண்டி, சமூக சேவை செய்வதிலும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திவதிலும் ஆர்வம் உண்டு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், அதிரடியான கருத்துக்களையும், பகிரங்கமாக தெரிவிப்பார். சமீபத்தில், ஒரு பட விழாவில் பேசிய அவர், ‘திருமணம் என்பது, ஒரு பெண்ணுக்கு முக்கியமான விஷயம். இதில், ஒரு சிலருக்கு இனிமையான அனுபவங்களையும், சிலருக்கு, கசப்பான அனுபவங்களையும் அளிக்கலாம். அதற்காக, பெண்கள், தனித்துவத்தை விட்டு விடக் கூடாது.
திருமணம் முடிந்து விட்டது என்பதற்காக, தங்களின் இலட்சியம், நோக்கத்தை, தியாகம் செய்து விடக் கூடாது. நம் நாட்டில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இது, எனக்கு கவலை அளிக்கிறது’ என, கூறியுள்ளார்.

No comments:

Post a Comment