17.11.13

சுசீந்திரனிடம் கதை கேட்ட விஜய்


பாண்டிய நாடு பல்வேறு கதவுகளை திறக்கும் போலிருக்கிறது. விஷால் உற்சாகமாக அடுத்தப் படத்தை தயாரிக்கிறார். சுசீந்திரனுக்கு விஜய்யிடமிருந்து படம் செய்ய அழைப்பு வந்திருக்கிறது.

வெறும் ஆக்ஷனை நம்பாமல் கதையோடு இணைந்த ஆக்ஷனையே இப்போதெல்லாம் இளைய தளபதி தேடுகிறார். அந்தவகையில் பாண்டிய நாடு அவருக்கு பிடித்திருக்கிறது. சுசீந்திரனை அழைத்து பாராட்டியவர், தனக்காக கதை செய்யும்படி கேட்டிருக்கிறார். கதை பிடித்திருந்தால் உடனே கால்ஷீட் தருவதாகவும் வாக்களித்துள்ளார்.

சுசீந்திரன் அடுத்த மாதம் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வீர தீர சூரன் படத்தை தொடங்குகிறார். ரொமாண்டிக் காமெடியான இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்க்காக அவர் கதை செய்வார் என தெரிகிறது.

No comments:

Post a Comment