21.11.13

நடிகர் கிருஷ்ணாவிற்கு திருமணம்



நடிகர் கிருஷ்ணாவிற்கும் கோவையை சேர்ந்த கைவல்யாவுக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது.
'கற்றது களவு', 'அலிபாபா', 'கழுகு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. இவர் பிரபல தயாரிப்பாளர் சேகரின் இரண்டாவது மகனும், முன்னணி இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் ஆவார்.
தற்போது 'வானவராயன் வல்லவராயன்', 'விழித்திரு' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது.
கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த ரங்கநாதன் - வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் திருமணம் முடிவாகியிருக்கிறது. கைவல்யா சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இன்று கோவையில் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற இருக்கிறது.
2014 பிப்ரவரி 6ம் தேதி கோவையில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண வரவேற்பு சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment