21.11.13

பொடியனாக மாறும் ஜெய்

ஜெய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு 'பொடியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'ராஜா ராணி' படத்தில் ஜெய்யின் நடிப்பிற்கு பிறகு, அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிகிறது. 'திருமணம் என்கிற நிக்கா', 'நவீன சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜெய்.
'உதயம் NH4' என்ற படத்தினை இயக்கிய மணிமாறன் தனது அடுத்த படத்தின் நாயகனாக ஜெய்யை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
படத்திற்கு 'பொடியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் தலைப்பு குறித்து “சிறுவர்களைத் தான் பொடியன் என்று அழைப்பார்கள். ஆனால், இப்படத்தை பார்த்த பிறகு பொடியன் என்பதற்கான பொருளை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள். அதன் பிறகு சிறுவர்களை பொடியன் என்று யாரும் அழைக்க மாட்டார்கள்.” என்று இயக்குநர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
அரசியல் பின்னணி கொண்ட கதைக்கு, 'பொடியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார் மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment