4.12.13

உணவகத்தில் வெங்காயம் கேட்டதால் விழுந்த அடியால் ஏழு தையல்!


onion-fighting

உணவகத்தில் நண்பர்களுடன் சாப்பிடச் சென்றவர், கூடுதலாக வெங்காயம் கேட்டதால், ஓட்டல் ஊழியர்களால் தாக்கப்பட்ட கொடுமை, மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. மயூர் ஜாதவ், 23, என்ற மருத்துவமனை ஊழியர், நேற்று முன்தினம் இரவில், தன் நண்பர்களுடன், மும்பை பாந்த்ரா என்ற இடத்தில்  உள்ள, பிரபல உணவகம் ஒன்றுக்கு சாப்பிடச் சென்றார்.சிக்கன், மட்டன், ரொட்டி என, அனைவரும் விருப்பத்திற்கு ஏற்ப, சாப்பிட்டுள்ளனர். சைடு டிஷ்ஷாக, வெங்காயம், ஒரு பிளேட் வைக்கப்பட்டுள்ளது. அது, போதாது என, கூடுதலாக தருமாறு கேட்டுள்ளனர்.
வெங்காயம் விலை, எவ்வளவு விற்கிறது தெரியுமா… என, சாப்பாடு பரிமாறிய, உணவக ஊழியர் கேள்வி எழுப்பியதோடு,  இவ்வளவு தான் தர முடியும் என, உறுதியாக கூறியுள்ளார்.நூறு ரூபாய்க்கு விற்ற வெங்காயம், 25 ரூபாயாக குறைந்து விட்டதே; நாங்கள், ஏழு பேர் சாப்பிடுகிறோம். வெங்காயம் போதவில்லை. தர மறுப்பது நியாயமா… என, சாப்பிட சென்ற, மயூர் ஜாதவின் நண்பர்கள் கேட்டுள்ளனர்.வார்த்தைகள் முற்றி, இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில், ஜாதவ் கடுமையாக தாக்கப்பட்டார். போலீசுக்கு தகவல் தெரிந்து, அவர்கள் வந்து, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.ஜாதவ் முகத்தில், ஏழு தையல் போடப்பட்டுள்ளது. அவர், அந்த அடிதடி உணவகம் மீது, போலீசில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment