18.11.13

மகளுக்கு ஆராதனா என பெயர் சூட்டினார் சிவகார்த்திகேயன்!!


siva

சிவகார்த்திகேயன் இந்த வருடம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து ஹட்ரிக் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். 5 படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக ஆகிவிட்டார்.
இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை ஒன்று பிறந்தது அவரை மேலும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இப்போது தன்னுடைய குழந்தைக்கு ஆராதனா என பெயர் சூட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது ஹன்சிகா மொத்வானியுடன் இணைந்து மான் கராத்தே படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்திலும் நடிக்கப்போகிறாராம். 2014ம் ஆண்டு இறுதி வரை தன் கைவசம் படங்கள் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் விரைவில் தயாரிப்பாளராக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment