24.11.13

எனக்கு ஜாக்பாட் அடித்து விட்டது: நானி உற்சாகம்



விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ், துளசி நடிக்கும் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் தெலுங்கு ரைட்சை நான் ஈ ஹீரோ நானி வாங்கியிருக்கிறார். தெலுங்கில் அவரே தயாரித்து விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நானி பேசியதாவது: நான் விஜய்சேதுபதியின் பரம ரசிகன். அவரது நெருங்கிய நண்பன். அவர் நடிக்கும் எல்லா படத்தையும் பார்த்துவிடுவேன். சமீபத்தில் அவரை சந்தித்தபோது பண்ணையாரும் பத்மினியும் கதையை சொல்லி சில போட்டாக்களை காட்டினார்.
அதை பர்த்தும் அதை தெலுங்கில் நான் நடிக்க வேண்டும் என்று படத்தின் ரைட்சை வாங்கினேன். இப்போது பின்னணி இசை சேர்க்கப்படாத நிலையில் படத்தை பார்த்தபோது எனக்கு லாட்டரி அடித்த மாதிரி இருந்தது. எனது நண்பர்களுக்கு போன் பண்ணி சொன்னேன்.
இப்போது பெரிய திரையில் பாடலையும், டிரைய்லரையும் பார்த்தபோது ஜாக்பாட் அடித்த மாதிரி இருந்தது. அதே நேரத்தில் இந்த அளவுக்கு நம்மால் செய்ய முடியுமா என்கிற பயமும் வந்திருக்கிறது.
இவ்வாறு நானி கூறினார்.

No comments:

Post a Comment