24.11.13

ஜில்லாவுக்கு இப்போதிலிருந்து தியேட்டர் புக் பண்ணுங்க! – விஜய் தீவிரம்



பொங்கலுக்கு வருவதில் உறுதியாக நிற்கும் விஜய், தன் ஜில்லா படத்துக்கு வேகமாக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
படத்தின் தயாரிப்பாளரிடம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அரங்குகளை ஒப்பந்தம் செய்யுமாறு விஜய் கூறியுள்ளாராம்.
ஜில்லா
இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் உள்ள அரங்குகளை தீவிரமாக வளைத்துப் போட்டு வருகிறார்களாம்.
பொங்கலுக்கு வரும் மற்ற பெரிய படங்களான கோச்சடையான் மற்றும் வீரம் படங்களுக்கு தியேட்டர் தருவதாக வாக்களித்துள்ள நிலையில், ஜில்லாவுக்கும் அப்படி அதிக அரங்குகளை ஒதுக்குவது என மல்டிப்ளெக்ஸ் மற்றும் இரு தியேட்டர் வளாகங்கள் திகைத்து நிற்கின்றனவாம்.
‘ஆனால் இதுபற்றியெல்லாம் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். படத்தை முழுமையாக விற்றாகிவிட்டது. பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்பதை வாங்கியிருப்பவர்களுக்கு அழுத்தமாக சொல்லிவிடுங்கள்’, என்று விஜய்யே ஆர்பி சவுத்திரியிடம் கூறியுள்ளாராம்.
நெல்லை, கன்யாகுமரி மற்றும் தூத்துக்குடி பகுதியில்தான் முதல் புக்கிங்கை ஆரம்பித்துள்ளது ஜில்லா டீம்.
அவர்களிடம், இந்த முறை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நம்ம படம் வெளியாகும். தியேட்டர்களைக் கொடுங்க என்று உறுதியளித்தாராம் ஆர்பி சவுத்ரி.

No comments:

Post a Comment