24.11.13

மீண்டும் ஸ்ரீதேவியுடன் கவுரவ வேடத்தில் நடிக்கும் அஜீத்

    மீண்டும் ஸ்ரீதேவியுடன் கவுரவ வேடத்தில் நடிக்கும் அஜீத்

பிரியாணி படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு ரிலீஸுக்கு காத்திருக்கிறார் வெங்கட்பிரபு. அடுத்ததாக அவர் சொந்தமாக தயாரித்து இயக்க ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்துள்ளராம்.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் அவருடைய வழக்கமான பிரேம்ஜி கோஷ்டிகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஆனாலும் அவரது நண்பர்கள் புதுமுகங்கள் வைத்து எடுக்கும் படத்தில் யாராவது ஒரு பிரபல நடிகரை கெளரவ வேடத்தில் நடிக்க வைத்தால் எளிதில் படம் வியாபாரம் ஆகும் என அறிவுரை கூறியதால், தனது மங்காத்தா நட்பை மீண்டும் புதுப்பிக்க வெங்கட்பிரபு முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் கதையை தல அஜீத்திடம் கூறிய வெங்கட்பிரபு, அதில் வரும் கவுரவ வேடத்தில் ஒரு வாரம் மட்டும் கால்ஷீட் கொடுத்து நடித்து தரும்படி கேட்டுக்கொண்டார். பில்லாவுக்கு பிறகு நீண்டநாள் வெற்றியை ருசிக்காமல் இருந்த அஜீத்துக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் வெங்கட்பிரபு என்ற காரணத்தால், உடனே சரியென்று ஒப்புக்கொண்டார். ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு தல அஜீத் கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் இது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஸ்ரீதேவிக்கும் ஒரு சின்ன கேரக்டர் இருக்கிறதாம்.

No comments:

Post a Comment