22.11.13

ப்ரியாஆனந்த்தை பீல் பண்ண வைத்த பென்சில்!



ப்ரியாஆனந்தின் திரை வாழ்க்கையை எதிர்நீச்சலுக்கு முன்பு, எதிர்நீச்சலுக்கு பிறகு என்று இரண்டு விதமாக பிரிக்கலாம். காரணம், அந்தபடத்துக்கு முன்பு, எந்த படாதிபதியிடமும் இத்தனை லட்சம் சம்பளம் தாருங்கள் என்று அவர் வாய்விட்டு கேட்டதே இல்லையாம்.
ஆனால் குறித்த நாட்களில் குறித்த நேரங்களில் படப்பிடிப்புக்கு சரியாக ஆஜராகி விடும் சின்சியரான நடிகையாகத்தான் இருந்திருக்கிறார்.
ஆனால், எதிர்நீச்சல் ஹிட்டுக்குப்பிறகு ஏனைய நடிகைகளைப்போன்று தாமதமாக வருவது, அடிக்கடி படப்பிடிபபுக்கு லீவு போடுவது என்றெல்லாம் வளர்ச்சியடைந்திருக்கிறார்.
அதோடு, படத்துக்குப்படம் 5 லட்சங்களாக உயர்த்தி, இப்போது 40 தொட்டு நிற்கிறார். நடித்து வரும் புதிய படங்களுக்குப்பிறகு 50 லட்சத்தை தொட்டு விட வேண்டும் என்பதுதான் ப்ரியாஆனந்தின் தற்போதைய திட்டமாக உள்ளது.
வணக்கம் சென்னைக்குப்பிறகு இந்த திட்டத்தை கையிலெடுத்த ப்ரியா, தன்னை முற்றுகையிட்ட அனைத்து கம்பெனிகளிடம் இந்த ஐம்பதைதான் முன்மொழிந்தார்.
அதனால் அப்படி வந்தவர்கள் அனைவரும் தாங்காது பட்ஜெட் என்று விழுந்தடித்து ஓடிவிட்டனர். அதில் ஒன்றுதான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் பென்சில் படமும்.
இந்த படத்திற்காக நடிகையிடம் பேசியபோது, நடிகராக அவர் இப்போது புதுமுகம்தான். ஆனால் நான் வளர்ந்து விட்ட நடிகை என்று சொல்லி அதுவரை 40ல் இருந்த சம்பளத்தை தடாலடியாக 50 லட்சமாக்கியிருக்கிறார்.
அதைக்கேட்டு ஆடிப்போனதாம் தயாரிப்புத்துறை. அதனால் விரலுக்கேற்ற வீக்கமாக ப்ரியாவிடம் பேசிய வேடத்துக்கு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யாவை புக் பண்ணினார்களாம். இப்போதுதான் தமிழில் வளர்ந்து வரும் நடிகை என்பதால் சம்பளம் பற்றியே பேசாமல் கமிட்டாகி தற்போது பென்சில் சீவிக்கொண்டிருக்கிறார் அவர்.
ஆனால், இப்போது ப்ரியாஆனந்தை சந்திக்கும் பலரும், தடாலடியாக சம்பளம் கேட்டு ஒரு நல்ல படத்தை இழந்து விட்டீர்களே என்கிறார்களாம். இதையே பலரும் முன்மொழிவதால், அவசரப்பட்டு நல்ல படத்தை இழந்து விட்டோமே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் நடிகை.

No comments:

Post a Comment