22.11.13

ரசிகர்களின் அன்பு தொல்லை: கரீனா கண்ணீர்!


திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாலிவுட் நடிகை, கரீனா கபூரை, ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்து, பிடித்து இழுத்து, தொந்தரவு செய்ததால், பயத்தில், அவர், கண்ணீர் விட்டு அழுதார்.
உருக வைக்கும் காதல் காட்சிகளிலும், அதிரடியான சண்டை காட்சிகளிலும் நடித்து, புகழ் பெற்றவர், பிரபல இந்தி நடிகை கரீனா கபூர். இவர், நடிகர், இம்ரான் கானுடன் சேர்ந்து நடித்த, கோரி தேரி ப்யார் மேன் திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. படத்தின் நாயகி, கரீனா மற்றும் நாயகன், இம்ரான் கான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது, ஏராளமான ரசிகர்கள், அவரை சூழ்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் கரீனாவை சுற்றி, பெரும் படையே திரண்டுவிட்டது. இம்ரான் கான், கரீனாவின் பாதுகாவலர்கள் ஆகியோர் முயற்சித்தும், கூட்டத்தினரிடமிருந்து, கரீனாவை மீட்க முடியவில்லை.
ரசிகர்கள் பலரும், கரீனாவின் மேலே விழுந்து, அவரை பிடித்து இழுத்து, தொந்தரவு செய்தனர். இதைப் பார்த்து, மிரண்ட அவர், ஒரு கட்டத்தில், கண்ணீர் விட்டு அழத் துவங்கி விட்டார். சற்று நேரத்தில், அவரின் பாதுகாப்பு அதிகாரிகள், ரசிகர்களை ஒதுக்கிவிட்டு, கரீனாவை பத்திரமாக காரில் ஏற்றி, அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment