13.12.13

தேவஸ்தான விடுதிகளில் ஜனவரி 11 முதல் அன்னதானம் தொடக்கம்

திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகளில் அன்னதானத்தை தேவஸ்தானம் விரைவில் தொடங்க உள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியற்றை தேவஸ்தான தங்கும் விடுதிகளான ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம் தங்கும் விடுதிகளில் விரைவில் வழங்க உள்ளது. இதை ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி முதல் தேவஸ்தானம் தொடங்க உள்ளது.  மேலும் திருமலையில் உள்ள சங்குமிட்டா வளைவில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வரிசை சாலையில் நீள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க தேவஸ்தானம் 45 லட்சம் செலவில் இரும்பு பாலம் அமைத்து வருகிறது.

No comments:

Post a Comment