19.12.13

தற்கொலைப்படை தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை பயங்கரவாதி புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான காஜர் போர்ட் அருகே உள்ள மிர் அலி தேசில் என்னுமிடத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள ராணுவ சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்து மோதி தாக்குதல் நிகழ்த்தினார்.
இந்த பயங்கரத் தாக்குதலில், சோதனை சாவடியிலிருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உடல்சிதறி பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.

No comments:

Post a Comment