19.12.13

இந்தியாவில் இருந்து கறவை மாடுகளை வாங்க நேபாள அரசு முடிவு

இந்தியாவிலிருந்து கறவை மாடுகளை வாங்க நேபாள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து  இந்த வார இறுதியில் நடைபெறும் நேபாள-இந்திய அரசுகளின் செயலாளர் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
  நேபாள நாட்டில்  நாள்தோறும் 5 இலட்சம் லிட்டர் எடையுள்ள பால் பற்றாக்குறை நிலவுகிறது  எனவே இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் சிறந்த இனக் கறவை மாடுகளை வாங்குவது பற்றி ஆலோசித்து வருகிறது இது தொடர்பாக உடன்படிக்கை எற்பட்டால், நேபாளத்தில் பால் பொருட்களில் தன்னிறைவு முற்றிலும் நனவாக்கப்படும் என்றும் நேபாளத்தின் வணிக வினியோக அமைச்சின் செயலர் மாட்ஃஹப் பிரசாத் ரெக்மி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment