2.12.13

தற்போதைய மின்வெட்டுக்கு தி.மு.க காரணம் அல்ல: ஏற்காடு தொகுதி பிரச்சாரத்தில் ஸ்டாலின்

mk-stalin-stills-photos-01-2



ஏற்காடு இடைத்தேரதல் இம்மாதம் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் இன்று ஏற்காடு மலைக்கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு அவர் ஏற்காடு பஸ் நிலையத்தில் வேனில் நின்றவாற பேசினார். அப்போது அவர் ஏற்காடு பகுதியில்சில்வர் ஒக் மரங்களை வெட்ட அரசு தடை விதித்ததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இங்கு குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை
ஏற்காடு தொகுதியில் உள்ள ரேசன் கடைகளில் 2 லிட்டர் மண்எண்ணை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய மின் வெட்டுக்கு தி.மு.க காரணம் அல்ல. இதற்கு அ.தி.மு.க அரசு தான் காரணம். மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசு எடுக்க வில்லை. நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment