10.12.13

டிச.17-ல் ஏற்காட்டில் திமுக பொதுக்கூட்டம்: வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, திமுக சார்பில் டிசம்பர் 17-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் வாழப்பாடியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாறன் 64,655 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் சேலம் மாவட்டப் பொறுப்பார் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாறன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் திங்கள்கிழமை அறிவாலயத்துக்கு வந்தனர்.மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.ஏற்காடு தேர்தல் தோல்வி தொடர்பாக அதில் ஆராயப்பட்டது.அதன் பிறகு எஸ்.ஆர்.சிவலிங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் டிச.17-ஆம் தேதி வாழப்பாடி பஸ்நிலையம் அருகில் மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் உரையாற்ற உள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், அனத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சியினர் பெருந்திரளாக கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment