10.12.13

யாராவது தொடர்பு கொண்டால் உடனே சொல்லுங்கள்: கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கேஜ்ரிவால் கட்டளை



தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பாராத விதத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். யாராவது உங்களை தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை விடுத்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி அமைக்க 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், குதிரைபேரங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கேஜ்ரிவால் கருதுகிறாராம். எனவே, ஏதாவது கட்சிகள் உங்களை அணுகினால் உடனே தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எக்காரணம் கொண்டும் காங்கிரஸுடனோ, பாஜகவுடனோ கூட்டணி சேராது என்று மீண்டும் தெளிவுபடக் கூறியுள்ளார் கேஜ்ரிவால்.
இன்று கட்சியின் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment