10.12.13

இந்தோனேசியாவில் டிரக் மீது ரயில் மோதி விபத்து: 7 பேர் சாவு

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை எரிபொருள் ஏற்றி வந்த டிரக் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது:-
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவின் வடக்குப்பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எரிபொருள் ஏற்றி வந்த டிரக் மீது ரயில் மோதியதில், டிரக் வெடித்து சிதறியது. அதையடுத்து அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலில் இருந்த பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர். விபந்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 உடல்களை மீட்டதுடன், காயமடைந்த மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment