10.12.13

தே.ஜ.கூட்டணியின் ஓர் அங்கமாக இருக்கவே விரும்புகிறேன்: எடியூரப்பா



நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா.
இதுகுறித்து, பாஜக தலைவர் அத்வானிக்கு கடிதம் எழுதியதாகவும், தே.ஜ.கூட்டணியில் ஓர் அங்கமாக க.ஜ.கட்சி இருக்க தான் விரும்புவதாகவும் ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.
மாநில பாஜக தலைவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்தியில் உள்ள தலைவர்கள் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர்களிடம் இருந்து ஏதாவது தகவல் வந்தால், நான் எங்கள் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி தெரிவிப்பேன் என்றார் எடியூரப்பா.
எடியூரப்பாவை பாஜகவில் மீண்டும் சேர்க்க முறையாக அழைப்பு அனுப்பப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், எடியூரப்பா இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா, அவர் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், காங்கிரஸ் ஆதரவுக் கரம் நீட்டியும் மறுத்தது ஆச்சரியப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment