17.12.13

விஜயகாந்த் வீடு அருகே சுற்றித் திரிந்தவர் கைது

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பெருங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ்(35). இவர் தேமுதிக கொடியை உடலில் வரைந்து கொண்டு விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீடு அருகே திங்கள்கிழமை சுற்றிக் கொண்டிருந்தார். 
சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தேமுதிக அனுதாபி என்பதும், பெருங்குடியில் உள்ள அவரது வீட்டை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி எனக் கூறி அதிகாரிகள் இடித்துள்ளனராம். இதனால், இந்த தகவலை விஜயகாந்திடம் கூறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக ரமேஷ் விருகம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.
விஜயகாந்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக உடலில் தேமுதிக கொடியை வரைந்து கொண்டு அவரது வீட்டை  வலம் வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

No comments:

Post a Comment