17.12.13

நீலகிரியில் ஹெத்தையம்மன் பண்டிகை: நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

17 December 2013 07:38 AM IST
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளது:
தமிழக அரசு உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்படும் நாளன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளதற்கேற்ப, நாளை (புதன்கிழமை) நீலகிரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இதற்குப் பதிலாக 2014 ஜனவரி 4-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும். இருப்பினும், உள்ளூர் விடுமுறை நாளான 18-ஆம் தேதி புதன்கிழமை 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் மட்டும் வழக்கம்போல நடைபெறும்.

No comments:

Post a Comment