1.12.13

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மழை

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் சாரல் மழை பெய்கிறது. புரசைவாக்கம் கீழ்பாக்கம், அம்பத்தூர், கிண்டி, ஈக்காடுதாங்கல், பூந்தமல்லி, போரூர் உட்பட சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
மேலும்  திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் உள்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கனமழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment