1.12.13

ஏற்காடு இடைத்தேர்தல்: நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதிநடக்கிறது. இதையொட்டி அப்பகுதியில் பல்வேறு கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்காடு தொகுதியில் கடந்த 28-ந் தேதி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது.
எனவே, ஏற்காடு தொகுதியில் தங்கி பிரசாரம் செய்துவரும் வெளிமாவட்டத்தினர் நாளை மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேறுமாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment