3.12.13

கொலை வழக்கில் முன்னாள் எம்.பி. குற்றவாளி

பிகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சத்யேந்திர சிங் கொலை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தைச் சேர்ந்த முன்னாள்  எம்.பி. விஜய் கிருஷ்ணா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என்று பாட்னா நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தள தலைவர் சத்யேந்திர சிங் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதாதள முன்னாள் எம்.பி. விஜய் கிருஷ்ணா, அவரது மகன் சாணக்யா சிங், வேலைக்காரர் ககன், பாதுகாவலர் உமேஷ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த பாட்னா மாவட்ட கூடுதல் நீதிபதி நந்தகுமார் ஸ்ரீவாஸ்தவா,விஜய் கிருஷ்ணா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என்று  திங்கள்கிழமை  தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment