3.12.13

பிரேஸ்லெட் சர்ச்சை: சுங்க அதிகாரிகளுடன் நடிகர் கலாபவன் மணி மோதல்


பிரேஸ்லெட் சர்ச்சை: சுங்க அதிகாரிகளுடன் நடிகர் கலாபவன் மணி மோதல்

கொச்சி: நடிகர் கலாபவன் மணி அணிந்திருந்த பிரேஸ்லெட் பற்றி கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேக கேள்விகளை எழுப்பியதால், நடிகருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி, தமிழ் திரைப்படங்களிலும், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிறன்று கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அவர் கையில் அணிந்திருந்த கனமான தங்க பிரேஸ்லெட் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விசாரித்தனர்.
இதனால் கோபம் அடைந்த கலாபவன் மணி, பிரேஸ்லெட்டை கழற்றி கவுண்ட்டரில் வீசிவிட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் கலாபவன் மணி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், சுங்க இலாகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த குற்றச்சாட்டினை கலாபவன் மணி, மறுத்துள்ளார். அடிப்படை ஆதாரமில்லாமல் தன்மீது சுங்க இலாகாவினர் குற்றம் சாட்டியதாக தெரிவித்தார். நான் தங்க பிரேஸ்லெட்டினை கடத்தி வந்திருக்கலாம் என்றும் அதிகார் சந்தேகக் கேள்விகள் எழுப்பியதாக அவர் கூறினார்.
சமீப காலமாகவே போலீசாரும், சுங்க இலாகாவினரும் தன்னை வேண்டும் என்றே துன்புறுத்தி வருவதாக தெரிவித்தார். "பிரேஸ்லெட்டினை பல ஆண்டுகளாக அதை அணிந்திருப்பதாக பதில் அளித்தேன். அதிகாரிகளிடம் நான் முரட்டுத்தனமாக பேசவில்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் அதுபற்றி தெளிவாக தெரியும்" என்றும் மணி கூறினார்.
அதேசமயம் பிரேஸ்லெட் குறித்து விளக்கம் அளிக்கும்படி, நடிகர் மணிக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்படும் என்று, சுங்க இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் அவருடைய காரை சோதனை போட்டபோதும் நடிகர் கலாபவன் மணி இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment