3.12.13

தமிழ் இசைச் சங்க விருதுகள் அறிவிப்பு




தமிழ் இசைச் சங்கத்தின் 2013-ஆம் ஆண்டுக்கான இசைப் பேரறிஞர் விருதுக்கு பரத நாட்டியக் கலைஞர் கிருஷ்ணகுமாரி நரேந்திரனும், பண் இசை பேரறிஞர் விருதுக்கு ஓதுவார் சீர்காழி எஸ்.திருஞானசம்பந்தனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 சென்னை அண்ணா சாலை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் தமிழ் இசைச் சங்கத்தின் 71-ஆவது இசை விழாவில், ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதியும் மத்திய மின்சார தீர்ப்பாயத்தின் தலைவருமான கற்பகவிநாயகம் இந்த விருதுகளை வழங்கி கெüரவிக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக பரதம் பயிற்றுவித்து வரும் கிருஷ்ணகுமாரி நரேந்திரன், சென்னையில் அபிநயா நாட்டியாலயா எனும் இசைப் பள்ளியை நடத்தி வருகிறார். எஸ்.திருஞானசம்பந்தன், கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக  சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment