5.12.13

ஆவடி அருகே கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம்



சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு கழிவுநீர்க் கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணத்தைப் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடியில் உள்ள குடியிருப்பு ப்பகுதியான, பக்தவச்சலபுரம் 2-வது தெருவில் சாலை ஓரத்தில் செல்லும் கழிவு நீர்க் கால்வாயில், நேற்று காலை 9 மணி அளவில் திடீரென ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மிதந்து வந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிச்சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்தனர். இதனையடுத்து துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன், கால்வாயில் மேலும் பணம் இருக்கிறதா? என்று சோதனையிட்டனர். அதில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சிக்கியது. இந்த பணம் வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.          

No comments:

Post a Comment