23.12.13

நகைப்பட்டறையில் ரூ.12 லட்சம் மதிப்பு தங்கம் திருட்டு

புது வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைப்பட்டறை ஒன்றில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அங்கு வேலை செய்த ஊழியர்கள் திருடி சென்றுள்ளனர்.
 அவர்களைப் பிடிக்க போலீஸ் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து போலீஸார் கூறியதாவது:-
 புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ் (34). தங்க நகை ஆசாரியான இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைப்பட்டறை ஒன்றை வைத்துள்ளார். இவரிடம் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரு நபர்கள் வேலை செய்து வந்தனர்.
 அவர்கள் இருவரிடம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நகை செய்வதற்காக 440 கிராம் தங்கத்தை சைலேஷ் கொடுத்ததாகத் தெரிகிறது. நகைப்பட்டறையில் அவர்கள் பொறுப்பில் இருந்த அந்தத் தங்கத்தை எடுத்துக் கொண்டு சனிக்கிழமை காலை தேநீர் அருந்த செல்வதாகக் கூறி அவர்கள் வெளியே வந்துள்ளனர்.
 அதன் பிறகு அவர்கள் மீண்டும் வேலைக்கு வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த சைலேஷ் அவர்கள் இருப்பிடத்துக்கு சென்று பார்த்த போது அவர்களது உடைமைகள் எதுவும் இல்லை.
 இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடு போன நகைகள் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புடையதாகும். அவர்களைப் பிடிக்க புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பலவேசம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment