23.12.13

மேலூர் ஒருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு

மேலூரில் 5 மணிநேரம் நடைபெற்ற சாலைமறியலைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் சங்கத்தினருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊரகமாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக போராட்டங்களை விவசாயிகள் கைவிட்டனர்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜேஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கூறியதை விவசாயிகள் நிராகரித்தனர். இந்நிலையில், யாரிடமும் அவர்கள் எதுவும் கூறாமல் சென்றுவிட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். விவசாயிகள் விடுவிக்கப்பட்ட பின்னர், அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், மாவட்ட வருவாய்த்துறையினர் மாவட்ட எஸ்பி ஆகியோர் தொடர்ந்து விவசாயிகளிடம் பேசினர்.
திங்கள்கிழமை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதிகூறியதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். மேலும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment