15.12.13

யானைகளால் ரூ. 15 லட்சம் பயிர்கள் சேதம்

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சூளகிரி வனப் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம், பங்கார்பேட் வட்டம், காமசமுத்திரம் ஒன்றியத்துக்குள் புகுந்த 35 யானைகள், எரகோல், பட்லஹள்ளி, கம்மனஹள்ளி உள்ளிட்ட கிராமப்புறங்களில் சுற்றித் திரிந்து வருவதோடு, அந்தப் பகுதியில் உள்ள வயல்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால், அந்தப் பகுதிகளில் ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமான பயிர்கள் நாசமாகியுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment