15.12.13

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மர்ம நபர் சாவு


அமெரிக்காவில் பள்ளியில் புகுந்து ஆசிரியரை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 மாணவர்கள் காயமடைந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ""கொலராடோ மாகாணத்தில் உள்ள அரபாஹு உயர் நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை இயற்பியல் விஞ்ஞானி நியூட்டன் கொலையான ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, திடீரென அங்கு துப்பாக்கியுடன் வந்த இளைஞரால் இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்தது. ஆசிரியரின் மீதான முன்பகையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். காயமடைந்தவர்களில் ஒருவர் மாணவி. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லேசாக காயமடைந்திருந்த மாணவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனினும், ஆசிரியர் மீதான குறி தவறியதால் அவர் தப்பிவிட்டார்'' என்றார்.

No comments:

Post a Comment