15.12.13

நாகையில் மீனவர்கள் வேலைநிறுத்தம்: மீன்வரத்து குறைந்தது

நாகை மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்ததைக் கண்டித்து, மற்ற மீனவர்கள் 4-வது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மீன்வரத்து குறைந்துள்ளது.
நாகையிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 110 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த புதன்கிழமை கைது செய்ததைக் கண்டித்தும், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அக்கரைப்பேட்டை மீனவர்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
4-வது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால், மீன்வரத்து குறைந்திருந்தது.
"மாதி' புயலால் கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக, கடந்த சில நாள்களாக மீன்பிடிப்புக்குச் செல்லாமலிருந்த மீன்பிடி பைபர் படகுகள் தற்போது மீன்பிடிப்பைத் தொடங்கியுள்ளதால் உள்ளூர் சந்தைக்கான மீன் வரத்தில் பெரியளவில் மாற்றம் இல்லை. எனினும், வெளியூர்களுக்கு அனுப்பப்படும் மீன்களின் அளவு குறைந்துள்ளது.

No comments:

Post a Comment