9.12.13

சோனியா பிறந்த நாள் நிகழ்ச்சி தள்ளிவைப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை (டிச. 9) நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், கறுப்பர் இன விடுதலைக்காகப் போராடியவரும், தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இந்திய அரசு 5 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது. எனவே, திங்கள்கிழமை (டிச. 9) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சோனியா காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் திட்டமிட்டிருந்தபடி பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment