9.12.13

நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான அலை: வைகோ



நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசுவதாகவும், மக்களவைத் தேர்தலில் மாற்றம் ஏற்படப் போவது உறுதி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை வரலாறு காணாத படுதோல்வி கிடைத்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸின் படுதோல்வி தமிழக மக்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.
2014 தேர்தலில் நரேந்திரமோடி பிரதமராவார் என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுகின்றன.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஓராண்டு காலத்தில் மக்களின் மதிப்பையும், ஆதரவையும் பெற்று, மதிக்கத்தக்க இடங்களைப் பெற்றுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்யம்தான் கிடைக்கும்.
ஏற்காடு இடைத்தேர்தலில வினியோகம் செய்யப்பட்ட ஊழல் பணத்தின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில்தான் இரண்டு கட்சிகளுக்கும் வாக்குகள் கிடைத்துள்ளன... என்றார் வைகோ.

No comments:

Post a Comment