9.12.13

மண்டேலா நினைவு பிரார்த்தனைக் கூட்டம்: இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்பு

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 5 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு தென் ஆப்பிரிக்கா செல்லவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த வியாழக்கிழமை இரவு நெல்சன் மண்டேலா உயிரிழந்தார். அவரது நினைவு பிரார்த்தனைக் கூட்டம் ஜோஹன்னஸ்பர்கில் உள்ள விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் எம்.பி. சதீஷ் மிஷ்டா ஆகியோர் கொண்ட பிரதிநிதிகள் குழு தென் ஆப்பிரிக்கா செல்லவுள்ளது என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment