9.12.13

இந்தியாவுக்கு எதிரான போட்டி: தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றியது

இன்று டர்பனில் நடைபெற்ற இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா வென்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 3போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஏற்கெனவே முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றியது.
இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 280/6 ரன்கள் எடுத்தது.
281 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 35.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 146 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

No comments:

Post a Comment